உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் பொதுத் தேர்தல்: தொழிலாளர் கட்சி தலைவர் அறிக்கை

Share

பிரித்தானியாவில் பொதுத் தேர்தல்: தொழிலாளர் கட்சி தலைவர் அறிக்கை

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் பொதுத் தேர்தல் திகதியை அறிவித்துள்ள நிலையில், தொழிலாளர் கட்சி தலைவர் சர் கீர் ஸ்டார்மர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பிரித்தானியாவின் அடுத்த அரசாங்கத்தை முடிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் திகதியை பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் நேற்று அறிவித்தார்.

அதன்படி பிரித்தானியாவில் வரும் ஜூலை 4ம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பிரித்தானிய அரச குடும்பம் தங்களின் அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் பொதுத் தேர்தல் அறிவிப்பை தொழிலாளர் கட்சி தலைவர் Sir Keir Starmer வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், நாட்டிற்கு தேவையான மற்றும் சரியான தருணத்தில் பிரதமர் அடுத்த பொதுத் தேர்தலை அறிவித்துள்ளார்.

இந்த தேர்தலில், எங்களின் ஜனநாயகத்தின் வலிமையால் அதிகாரம் மக்களிடம் திரும்பும், இந்த தேர்தல் உங்கள் எதிர்காலத்தை மாற்றுவதற்கான மிகப்பெரிய வாய்ப்பு.

இந்த தேர்தல் மாற்றத்திற்கான தேர்தல் பற்றியது, அத்துடன் பிரித்தானியர்களிடம் நாட்டை உழைக்கும் மக்களின் சேவைக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றும் அந்த அறிக்கையில் சர் கீர் ஸ்டார்மர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 27
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சன்ரைசர்ஸை வீழ்த்தி நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி அபார வெற்றி!

ஐபிஎல் 2026 தொடரின் தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி,...

Untitled 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டணத் திருத்தம்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதி முடிவு நாளை!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த தனது...

Untitled 25
உலகம்செய்திகள்

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏஐ இரகசியங்கள் கசிவு: சைபர் பாதுகாப்பு நிறுவனங்களுக்குப் பெரும் சவால்!

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic), உருவாக்கி வரும் தனது அடுத்த...

01 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீன ஆய்வுக்கப்பல் ஊழியருக்கு அவசர சிகிச்சை: மனிதாபிமான அடிப்படையில் உதவிய இலங்கை கடற்படை!

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நங்கூரமிட்டிருந்த சீன ஆய்வுக்கப்பலான ‘ஷி யான் 6’ (Shi...