24 662bfb2feec20
உலகம்செய்திகள்

ஐரோப்பாவில் வழிப்பறிக் கொள்ளையில் முதலிடம் பிடித்த நாடு

Share

ஐரோப்பாவில் வழிப்பறிக் கொள்ளையில் முதலிடம் பிடித்த நாடு

ஐரோப்பாவில் (Europe) வழிப்பறி சம்பவங்கள் அதிகம் பதிவாகியுள்ள நாடுகளின் பட்டியலில் இத்தாலி (Italy) முதலிடத்தில் வகிப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பல நாட்டவர்களின் கவனத்தை ஈர்க்கும் நாடான இத்தாலி தற்போது ஐரோப்பாவின் வழிப்பறி தலைநகரமாக மாறியுள்ளது.

இத்தாலியில் மக்கள் அதிகமாக திரளும் பொது போக்குவரத்து மையங்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் தெருக்களில் சர்வசாதாரணமாக வழிப்பறி சம்பவங்கள் நடப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சுற்றுலா பயணிகள் தங்கள் விலையுயர்ந்த பொருட்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும் எச்சரிக்கையுடன் செயற்படுமாறும் அந்நாட்டு பொலிஸ் அதிகாரிகள் தரப்பில் கேட்டுக்கொண்டுள்ளனர்.

வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்துள்ள நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இத்தாலி(Italy), இரண்டாமிடத்தில் பிரான்ஸ்(France), மூன்றாவது இடத்தில் ஸ்பெயின்(Spain), நான்காமிடத்தில் ஜேர்மனி(Germany) மற்றும் ஐந்தாமிடத்தில் நெதர்லாந்து(Netherlands) என முதல் ஐந்து இடங்களில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் நாடுகள் அமைந்துள்ளன.

Share
தொடர்புடையது
20 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2027ஆம் ஆண்டில் முன்பள்ளிகளுக்கான புதிய பாடத்திட்டம்: பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு

2027ஆம் ஆண்டிலிருந்து முன்பள்ளிகளுக்கான புதிய தேசிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும், அதற்கேற்ப ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சிகள்...

19 12
செய்திகள்அரசியல்இலங்கை

பாதெனிய – அனுராதபுரம் பிரதான வீதியில் விபத்து: அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் சகோதரர் உயிரிழப்பு!

பாதெனிய – அனுராதபுரம் பிரதான வீதியின் மஹகல்கடவல பகுதியில் இன்று (மார்ச் 15) இடம்பெற்ற சாலை...

18 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தகவல் தொழில்நுட்ப யுகத்தில் ஊடகப் பொறுப்புணர்வு: பிரதமர் ஹரிணி அமரசூரியவின் வலியுறுத்தல்

தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்களின் வளர்ச்சி, தகவல்களை ஜனநாயகப்படுத்தியுள்ள அதேவேளையில், அவற்றின் உண்மைத்தன்மை மற்றும்...

17 14
செய்திகள்அரசியல்இலங்கை

அசோக ரன்வலவுக்கு எதிராக மஹர நீதிமன்றம் பிடியாணை பிறப்பிப்பு

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சபாநாயகருமான அசோக ரன்வலவுக்கு எதிராக மஹர நீதவான்...