24 662308fb62d55
உலகம்செய்திகள்

இஸ்ரேல்-ஈரான் மோதல் குறித்து அதிரடி முடிவு

Share

இஸ்ரேல்-ஈரான் மோதல் குறித்து அதிரடி முடிவு

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்றங்களை தணிக்க G7 நாடுகள் உறுதிபூண்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளின்கன் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், மேற்குக் கரையில் வன்முறையில் ஈடுபட்டுள்ள இஸ்ரேலிய தீவிரவாதிகளின் சார்பாக நிதி திரட்டும் இரண்டு அமைப்புகளின் மீது அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது.

மேலும் ஐரோப்பிய ஒன்றியமும் “தீவிரவாத குடியேற்றக்காரர்களுக்கு” அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானிய நகரமான இஸ்பஹானில் உள்ள விமான நிலையம் மற்றும் இராணுவ தளத்திற்கு அருகில் இஸ்ரேல் நேற்று தாக்குதல் மேற்கொண்டிருந்தது.

ஈரானின் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் மேற்கொள்ள வேண்டாம் என அமெரிக்கா கூறியிருந்த நிலையில் இஸ்ரேல் தனது முடிவுகளை தன்னிச்சையாக எடுக்கும் என தெரிவித்த அடுத்த நாளே ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

இருப்பினும் தமது நாடு மீது இஸ்ரேல் உண்மையில் தாக்குதல் நடத்தியதா என்பது தொடர்பில் சந்தேகம் நிலவுவதாகவும் இஸ்ரேல் மீது உடனடி தாக்குதல் மேற்கொள்ளும் திட்டம் எதுவும் இல்லை என்றும் ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் ஈரானின் எல்லைப் பகுதியில் சிறிய வகை ட்ரோன்கள் தாக்கி அழிக்கப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
15 3
செய்திகள்உலகம்

கியூபா எல்லைப்படையில் தாக்குதல்: அமெரிக்கப் படகில் இருந்த நால்வர் உயிரிழப்பு, 6 பேர் கைது!

அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட வேகப்படகொன்றில் இருந்தவர்கள் மீது கியூபா எல்லைக் காவல் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப்...

14 1
செய்திகள்உலகம்

வெனிசுலாவில் 3,200 அரசியல் கைதிகள் விடுதலை: புதிய அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை!

வெனிசுலாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பொது மன்னிப்புச் சட்டத்தின் (Amnesty Law) கீழ், 3,200 இற்கும் மேற்பட்ட...

13 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு உதவித்தொகை: மஹாபொல அறக்கட்டளை அறிவிப்பு!

‘தித்வா’ (Titwa) சூறாவளியால் பாதிக்கப்பட்டுப் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு, சிறப்பு மற்றும் ஒரு...

12 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொடி லெசிக்கு 7 நாட்கள் சிஐடி தடுப்புக் காவல்: கொலை, கொலை முயற்சி என 26 வழக்குகள் நிலுவை!

இந்தியாவில் கைது செய்யப்பட்டு இன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவரும், போதைப்பொருள்...