24 66088ec02b81c
உலகம்செய்திகள்

தெற்கு இங்கிலாந்தில் 132 வெள்ள எச்சரிக்கை..ஈஸ்டர் நிகழ்வுகள் பாதிப்பு

Share

தெற்கு இங்கிலாந்தில் 132 வெள்ள எச்சரிக்கை..ஈஸ்டர் நிகழ்வுகள் பாதிப்பு

பிரித்தானியாவில் சமீபத்திய நாட்களில் பெய்த கனமழையால் ஈஸ்டர் நிகழ்வுகள் பாதிக்கப்பட்டன.

சனிக்கிழமையன்று பெய்த கனமழையினால், பிரித்தானியாவின் Worcestershire கவுண்டி கிரிக்கெட் கிளப்பின் மைதானம் தண்ணீரில் மூழ்கியது.

அதேபோல் எடின்பர்க் அருகே உள்ள Musselburgh ரேஸ்கோர்ஸ் குதிரைப் பந்தய மைதானத்திலும் தண்ணீர் சூழ்ந்தது.

கனமழை காரணமாக ஈஸ்டர் நிகழ்வுகள் பாதிக்கப்பட்ட நிலையில், Wiltshire மற்றும் Gloucestershire பகுதிகளில் 17 வெள்ள எச்சரிக்கைகளை சுற்றுச்சூழல் நிறுவனம் வெளியிட்டது.

மேலும், தெற்கு இங்கிலாந்து முழுவதும் 132 வெள்ள எச்சரிக்கைகளையும் வெளியிட்டுள்ளது. அதாவது, இங்கிலாந்து முழுவதும் பல நாட்கள் பெய்த கனமழைக்குப் பிறகு அந்த பகுதிகளில் வெள்ளம் சாத்தியம் ஆகும்.

திங்கட்கிழமை அதிகாலையில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் முழுவதும் பலத்த மழை பெய்து நாள் முழுவதும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையத்தின் ஆய்வாளர் கிரேக் ஸ்னெல் கூறுகையில், திங்கட்கிழமை நிச்சயமாக சில இடங்களில் மிகவும் ஈரப்பதமாக இருக்கும்.

Yorkshire-யில் இருந்து தெற்கே மிக மோசமான மழை உணரப்படும் மற்றும் வானிலை எச்சரிக்கைகள் விடுக்கப்பட வேண்டுமா என்பதை வானிலை அலுவலகம் கவனித்து வருகிறது என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...