tamilni 161 scaled
உலகம்செய்திகள்

பிரித்தானியா செல்லக் காத்திருக்கும் மாணவர்களுக்கு தகவல்

Share

பிரித்தானியா செல்லக் காத்திருக்கும் மாணவர்களுக்கு தகவல்

பிரித்தானியாவின் கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகம் (UEA) வெளிநாட்டு மாணவர்களுக்கு புதிய கல்வி உதவித்தொகை திட்டத்தை அறிவித்துள்ளது.

இதன் மூலம் திறமையான வெளிநாட்டு மாணவர்கள் பிரித்தானியாவில் கல்வியைத் தொடர வாய்ப்பு ஏற்ப்பட்டுள்ளது.

குறித்த பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம், மானிடவியல், பொறியியல், அறிவியல், கலைகள், சட்டம் மற்றும் பல துறைகள் காணப்படுகின்றது.

பிரித்தானியாவின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றான இது வெளிநாட்டு மாணவர்களுக்காக பல்வேறு கல்வித் துறைகளில் புதிய கல்வி உதவித்தொகை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த கல்வி உதவித்தொகை வாய்ப்பு 2024-2025 கல்வியாண்டில் இளநிலை பட்டப்படிப்பு மற்றும் முதுகலைப் படிப்புகளைத் தொடங்கும் மாணவர்களுக்கு கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

£4,000 பவுண்டுகள் கல்வி உதவித்தொகை வெளிநாட்டு முதுநிலை மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது கல்வி உதவித்தொகை திட்டத்தின் நுழைவுத் தேவைகளை பூர்த்தி செய்யும் மாணவர்களுக்கு தானாக வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...