24 66088ec02b81c
உலகம்செய்திகள்

தெற்கு இங்கிலாந்தில் 132 வெள்ள எச்சரிக்கை..ஈஸ்டர் நிகழ்வுகள் பாதிப்பு

Share

தெற்கு இங்கிலாந்தில் 132 வெள்ள எச்சரிக்கை..ஈஸ்டர் நிகழ்வுகள் பாதிப்பு

பிரித்தானியாவில் சமீபத்திய நாட்களில் பெய்த கனமழையால் ஈஸ்டர் நிகழ்வுகள் பாதிக்கப்பட்டன.

சனிக்கிழமையன்று பெய்த கனமழையினால், பிரித்தானியாவின் Worcestershire கவுண்டி கிரிக்கெட் கிளப்பின் மைதானம் தண்ணீரில் மூழ்கியது.

அதேபோல் எடின்பர்க் அருகே உள்ள Musselburgh ரேஸ்கோர்ஸ் குதிரைப் பந்தய மைதானத்திலும் தண்ணீர் சூழ்ந்தது.

கனமழை காரணமாக ஈஸ்டர் நிகழ்வுகள் பாதிக்கப்பட்ட நிலையில், Wiltshire மற்றும் Gloucestershire பகுதிகளில் 17 வெள்ள எச்சரிக்கைகளை சுற்றுச்சூழல் நிறுவனம் வெளியிட்டது.

மேலும், தெற்கு இங்கிலாந்து முழுவதும் 132 வெள்ள எச்சரிக்கைகளையும் வெளியிட்டுள்ளது. அதாவது, இங்கிலாந்து முழுவதும் பல நாட்கள் பெய்த கனமழைக்குப் பிறகு அந்த பகுதிகளில் வெள்ளம் சாத்தியம் ஆகும்.

திங்கட்கிழமை அதிகாலையில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் முழுவதும் பலத்த மழை பெய்து நாள் முழுவதும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையத்தின் ஆய்வாளர் கிரேக் ஸ்னெல் கூறுகையில், திங்கட்கிழமை நிச்சயமாக சில இடங்களில் மிகவும் ஈரப்பதமாக இருக்கும்.

Yorkshire-யில் இருந்து தெற்கே மிக மோசமான மழை உணரப்படும் மற்றும் வானிலை எச்சரிக்கைகள் விடுக்கப்பட வேண்டுமா என்பதை வானிலை அலுவலகம் கவனித்து வருகிறது என தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 2
செய்திகள்உலகம்

சீனாவின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘ஃபுஜியன்’ சேவையில் இணைப்பு: கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவுக்குப் போட்டி!

சீனாவின் மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று (நவம்பர்...

24 6714e92d5188d
செய்திகள்அரசியல்இலங்கை

என்னை ஹிட்லர் என்கிறார்கள், பாவம்: குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதிலடி!

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னைச் சிலர் ‘ஹிட்லர்’ என...

images 1 2
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீடீர் சோதனைகள்: கூரிய ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் 9 பேர் கைது!

யாழ்ப்பாணக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது,...

MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...