tamilni 334 scaled
உலகம்செய்திகள்

பசியில் வாடும் காசா மக்கள்! முதல்முறையாக வந்திறங்கிய 200 டன் உணவுகள்

Share

பசியில் வாடும் காசா மக்கள்! முதல்முறையாக வந்திறங்கிய 200 டன் உணவுகள்

முதல்முறையாக கடல் வழி மார்க்கமாக அனுப்பப்பட்ட உதவி தொகுப்புகள் காசாவின் கடற்கடையில் வந்து இறங்கியுள்ளன.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் மத்தியில் போர் நிடித்து வரும் நிலையில், கிட்டத்தட்ட 23 லட்சம் காசா மக்கள் உணவு மற்றும் மருத்துவப் பொருட்களின் பற்றாக்குறையால் அவதிப்பட்டு வருகின்றனர்.

அதே நேரத்தில், இஸ்ரேலின் கடுமையான தடை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தரைவழி மற்றும் வான்வழி போக்குவரத்துகள் மூலம் உதவிப் பொருட்கள் வழங்குவதில் சிக்கல் நீடித்து வருகிறது.

எனவே, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், கப்பல் மூலம் காசா மக்களுக்கு உணவு, குடிநீர், மருந்து மற்றும் தற்காலிக தங்குமிடங்கள் ஆகிய உதவிப் பொருட்களை வழங்குவதற்காக மத்திய தரைக்கடல் பகுதியான காசா கடற்கரையில் தற்காலிக மிதக்கும் துறைமுகம் அமைக்கப்படும் என அறிவித்தார்.

ஜோ பைடனின் உத்தரவுப்படி, காசா கடற்கரையில் தற்காலிக மிதக்கும் துறைமுகத்தை அமெரிக்க ராணுவ வீரர்கள் கட்டியெழுப்பினர்.

இந்நிலையில் கடல் வழி மார்க்கமாக அனுப்பப்பட்ட உதவிப் பொருட்கள் முதல்முறையாக காசா கடற்கடையில் தற்போது வந்து இறங்கியுள்ளது.

இதனை ஐக்கிய அமீரக நாடுகள்(United Arab Emirates) ஒத்துழைப்புடன் அமெரிக்க தொண்டு நிறுவனமான World Central Kitchen (WCK) வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

தற்போது காசா கடற்கரைக்கு வந்து இறங்கியுள்ள உதவிக் கப்பல், காசா மக்களுக்கு மிகவும் தேவையான 200 டன் உணவுகளை கொண்டு வந்துள்ளன என தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் இஸ்ரேல் மிகப்பெரிய தடையாக உள்ளது என தொண்டு நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டை இஸ்ரேல் தீவிரமாக மறுத்துள்ளது.

 

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...