tamilnaadij 3 scaled
உலகம்செய்திகள்

துபாய் செல்ல இனி 5 நாட்களில் விசா! இதை செய்தால் போதும்

Share

துபாய் செல்ல இனி 5 நாட்களில் விசா! இதை செய்தால் போதும்

தங்கள் நாட்டிற்கு எளிதாக மக்கள் வந்து செல்ல ஐக்கிய அரபு அமீரகம் புதிய விசா செயல்முறையை கொண்டு வந்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம் வேலை உட்பட விசாக்களை பெறுவதற்கான செயல்முறையை எளிதாகவும், விரைவாகவும் மாற்ற ”Work Bundle” என்ற புதிய தளத்தை ஆரம்பித்துள்ளது.

இதற்கு முன்பு இருந்த முறையில் பணி அனுமதி மற்றும் தங்குவதற்கான விசாக்கள் பெற 30 நாட்கள் வரை ஆகும். 16 வகையான ஆவணங்களை அதற்கு சமர்ப்பிக்க வேண்டும்.

ஆனால் புதிய செயல்முறை மூலம் இது தற்போது எளிதாகியுள்ளது. அதாவது, வெறும் 5 நாட்களில் இனிமேல் துபாய் விசா பெற முடியும்.

இதற்கு 5 ஆவணங்களை மட்டுமே சமர்ப்பித்தால் போதும். அத்துடன் இந்த செயல்முறைக்காக 7 முறை விசாமையங்களுக்கு செல்ல வேண்டிய சூழல் இருந்தது. தற்போது அது இரண்டு நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஐக்கிய அமீரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘Work Bundle என்ற இந்த தளம் அரசு நடைமுறைகளை எளிமையாக்கும். விரைவாக துபாயில் வந்து தங்கும் செயல்முறையை விரைவானதாக மற்றும்.

இதன் முதற்கட்டம் Invest in Dubai தளம் மூலம் துபாயில் செயல்படுத்தப்படும். அதேபோல் மற்ற அரசு டிஜிட்டல் தளங்களும் இதில் படிப்படியாக சேர்க்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
world 60
செய்திகள்அரசியல்இலங்கை

செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தை கொள்கை மற்றும் அறநெறிகளுடன் வடிவமைக்க வேண்டும்: பிரதமர் ஹரினி அமரசூரிய வலியுறுத்தல்

இலங்கை வெறுமனே செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்குத் தன்னைத் தகவமைத்துக் கொள்வதை விடுத்து, வலுவான கொள்கை,...

world 59
செய்திகள்உலகம்

டெனரிஃப் தீவை வந்தடையும் சொகுசுக் கப்பலில் ஹன்டா வைரஸ் பரவல்: ஐரோப்பிய நாடுகள் அவசர வெளியேற்ற நடவடிக்கை

‘எம்வி ஹோண்டியஸ்’ (MV Hondius) என்ற சொகுசுக் கப்பலில் பரவி வரும் கொடிய ஹன்டா வைரஸ்...

world 58
செய்திகள்இந்தியா

தமிழக முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு: மாநில நிதிநிலை குறித்து விரைவில் ‘வெள்ளை அறிக்கை’ வெளியீடு

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக இன்று (மே 10) பதவியேற்றுக்கொண்ட சி. ஜோசப் விஜய், தனது முதல்...

world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின் கட்டண உயர்வு: தரமற்ற நிலக்கரி இறக்குமதி சுமையை மக்கள் மீது சுமத்த வேண்டாம் என சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

அரசாங்கத்தினால் அண்மையில் அறிவிக்கப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வு, தரமற்ற நிலக்கரி இறக்குமதியினால் ஏற்பட்ட நட்டத்தை மின்...