tamilni 235 scaled
உலகம்செய்திகள்

குழந்தைகள் பிறந்த திகதியில் லொட்டரி டிக்கெட் வாங்கியவருக்கு அடித்த அதிர்ஷ்டம்! அரபு நாட்டில் கோடீஸ்வரரான இந்தியர்

Share

குழந்தைகள் பிறந்த திகதியில் லொட்டரி டிக்கெட் வாங்கியவருக்கு அடித்த அதிர்ஷ்டம்! அரபு நாட்டில் கோடீஸ்வரரான இந்தியர்

ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியர் ஒருவர் 33 கோடி லொட்டரியில் வென்றுள்ளார்.

இந்தியாவைச் சேர்ந்த ராஜீவ் அரிக்காட் என்ற நபர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள AI Ain -யில் கட்டிடக்கலை நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

லொட்டரி டிக்கெட் வாங்கும் பழக்கமுடைய ராஜீவ், மூன்று ஆண்டுகளாக The Big Ticket அபு தாபி வாராந்திர குலுக்கல் லொட்டரியில் மூன்று ஆண்டுகளாக பங்கேற்று வந்துள்ளார்.

இந்த நிலையில் இவர் தனது குழந்தைகளின் பிறந்த திகதிகளைக் கொண்ட லொட்டரி டிக்கெட்டை வாங்கியுள்ளார். அவர் வாங்கிய டிக்கெட்டுக்கு 33 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது.

அதாவது 7 மற்றும் 13 ஆகிய எண்கள் இடம்பெற்றிருக்கும் டிக்கெட்டை ராஜீவ் வாங்கினார். முன்னதாக, அதே எண்களுடன் ஒரு மில்லியன் திர்ஹம்களை வெல்வதை ராஜீவ் தவறவிட்டார். ஆனால், இம்முறை அவருக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.

இதுகுறித்து ராஜீவ் அரிக்காட் கூறுகையில், ‘நான் 10 ஆண்டுகளுக்கும் மேலாக AI Ain-யில் வசிக்கிறேன். கடந்த 3 ஆண்டுகளாக டிக்கெட் வாங்குகிறேன். ஆனால் லொட்டரியில் வெற்றி பெறுவது இதுவே முதல் முறை ஆகும்.

இம்முறை நானும் என் மனைவியும் 7 மற்றும் 13 எண்கள் கொண்ட டிக்கெட்டுகளைத் தேர்ந்தெடுத்தோம். இது எங்கள் குழந்தைகளின் பிறந்த திகதிகள்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு, அதே கலவையுடன் ஒரு Whisker மூலம் ஒரு மில்லியன் திர்ஹம்ஸை நான் தவறவிட்டேன். ஆனால் இந்த முறை நான் அதிர்ஷ்டசாலி’ என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...