உலகம்செய்திகள்

சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் இருந்து 19 பாகிஸ்தானியர்களை மீட்ட இந்திய கடற்படை

Share
24 65b8b5e815573
Share

சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் இருந்து 19 பாகிஸ்தானியர்களை மீட்ட இந்திய கடற்படை

சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் சிக்கிய மீன்பிடிக் கப்பலையும் அதிலிருந்த 19 பாகிஸ்தானியர்களையும் இந்திய கடற்படையினர் மீட்டனர்.

இந்திய கடற்படை இரண்டு நாட்களுக்குள் மற்றொரு மாபெரும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

கொச்சியில் இருந்து 800 மைல் தொலைவில் கடற்கொள்ளையர்களின் வசம் இருந்த Al Naeemi எனும் ஈரானிய மீன்பிடி கப்பலை மீட்டது.

INS Sumitra என்ற போர்க்கப்பல் மூலம் மீட்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

கடத்தப்பட்ட கப்பலில் 19 பாகிஸ்தான் மாலுமிகள் இருந்தனர். அவர்கள் அனைவரையும் மீட்டுவிட்டதாக இந்திய கடற்படை அறிவித்துள்ளது.

மேலும் கப்பலில் இருந்த 11 சோமாலிய கடற்கொள்ளையர்களையும் இந்திய கடற்படை வீரர்கள் கைது செய்தனர்.

இந்த மீட்பு பணியில் இந்திய கடற்படையின் மரைன் கமாண்டோக்கள் கலந்து கொண்டனர்.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்திய போர்க்கப்பல்கள் எப்போதும் எச்சரிக்கையுடன் இருப்பதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

சோமாலியாவின் கிழக்குக் கடற்கரையில் உள்ள ஏடன் வளைகுடாவில் கடற்கொள்ளையர் எதிர்ப்பு, கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் ரோந்துப் பணிகளுக்காக இந்திய கடற்படை போர்க்கப்பலான ஐஎன்எஸ் சுமித்ராவை அனுப்பியுள்ளது.

சில நாட்களுக்கு முன், FV Iman என்ற மற்றொரு ஈரானிய மீன்பிடி கப்பல், கடற்கொள்ளையர்களால் சிறைபிடிக்கப்பட்டது. அந்த நேரத்திலும் ஐஎன்எஸ் சுமித்ரா மீட்பு பணியை மேற்கொண்டது.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...