24 65b7902580300 1
உலகம்செய்திகள்

தேவாலயத்துக்குள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்திய முகமூடி அணிந்த நபர்கள்: வெளிநாடொன்றில் பரபரப்பு

Share

தேவாலயத்துக்குள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்திய முகமூடி அணிந்த நபர்கள்: வெளிநாடொன்றில் பரபரப்பு

துருக்கி நாட்டில், நேற்று தேவாலயம் ஒன்றிற்குள் திடீரென நுழைந்த முகமூடி அணிந்த இரண்டுபேர், தேவாலயத்துக்குள் கூடியிருந்த மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

துருக்கி நாட்டில், நேற்று தேவாலயம் ஒன்றில் ஆராதனை நடந்துகொண்டிருந்தபோது, திடீரென உள்ளே நுழைந்த முகமூடி அணிந்த இருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

ஒருவர் தலையில் குண்டுபாய, தேவாலயத்தில் இருந்தவர்கள் தரையில் படுத்துக்கொள்ள, அப்போது எதிர்பாராவிதமாக துப்பாக்கியுடன் வந்தவர்களில் ஒருவருடைய துப்பாக்கி செயல்படாமல் போயுள்ளது. உடனடியாக இருவரும் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

இந்த துயர சம்பவத்தில் ஒருவர் பலியாகியுள்ளார், பலர் காயமடைந்துள்ளனர்.

துப்பாக்கிச்சூட்டில் Tuncer Cihan (52) என்பவர் பலியான நிலையில், இந்த துப்பாக்கிச்சூடு அவரைக் குறிவைத்து நடத்தப்பட்டதாக இருக்கலாமேயொழிய தேவாலயத்தைக் குறிவைத்து நடத்தப்பட்டதாக இருக்க வாய்ப்பில்லை என முதலில் அதிகாரிகள் தெரிவித்தார்கள்.

ஆனால், பின்னர் ஐ எஸ் அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுக்கொண்டது. கிறிஸ்தவர்களையும் யூதர்களையும் குறிவைக்குமாறு தங்கள் அமைப்பின் தலைவர் அழைப்புவிடுத்ததைத் தொடர்ந்து இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

அந்த தேவாலயத்தில் தாக்குதல் நடத்திய நபர்கள், தாக்குதல் நடத்துவதற்காக அமைதியாக நடந்துவரும் காட்சிகள் சிக்கியுள்ளன.

பின்னர், நேற்று மாலையே, துப்பாக்கிச்சூடு நடத்திய இருவரையும் கைது செய்துள்ளதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

துப்பாக்கிச்சூடு நடத்தப்படும்போது, போலந்து நாட்டு தூதரான Witold Lesniak என்பவரும் அவரது குடும்பத்தினரும் தேவாலயத்துக்குள் இருந்தது குறிப்பிடத்தக்கது. என்றாலும், அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என நகர மேயர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 1
செய்திகள்இலங்கைவிளையாட்டு

உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் தோல்வி: கிரிக்கெட்டை முழுமையாகச் சீரமைக்க வேண்டும் – நாமல் ராஜபக்ஷ!

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய வீழ்ச்சி குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ள நாமல் ராஜபக்ஷ, தோல்விக்கான...

24 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யுத்த கால ஊடகவியலாளர் படுகொலைகள்: உண்மைகளைக் கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழு வேண்டும் – ரவூப் ஹக்கீம்!

மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வு மற்றும் “பாரதி ஒரு மனிதாபிமான...

23 1
செய்திகள்அரசியல்இலங்கை

அரசியல் இருப்புக்கு போராளிகள் தேவை, ஆனால் அவர்களின் தேவைகள் புறக்கணிப்பு: சிவகுரு மதிவண்ணன் குற்றச்சாட்டு!

புனித பூமி மக்கள் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சிவகுரு மதிவண்ணன் நேற்று (மார்ச் 1)...

22 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அவசரகால நிலையை நீட்டிக்க அரசாங்கம் பரிசீலனை!

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ, நாடு...