OIP 14
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் பொதுத் தேர்தல் எப்போது? பிரதமர் ரிஷி சுனக் வெளிப்படை

Share

பிரித்தானியாவில் பொதுத் தேர்தல் எப்போது என்பது தொடர்பில் பிரதமர் ரிஷி சுனக் முதல் முறையாக உறுதியான பதில் அளித்துள்ளார்.

ஆண்டின் இரண்டாவது பாதியில் பொதுத் தேர்தல் முன்னெடுக்கலாம் என்ற திட்டத்தில் இருப்பதாக பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். உள்ளாட்சித் தேர்தல்கள் முன்னெடுக்கப்படும் மே மாதத்தில் தேர்தலை அவர் அறிவிக்க வாய்ப்பிருப்பதாக சமீபத்திய வாரங்களில் தகவல் வெளியாகி வந்தது.

இந்த நிலையில், மக்கள் ஒரு மாற்றத்திற்காக காத்திருக்கும் நிலையில், தேர்தலை வேண்டும் என்றே ரிஷி சுனக் தள்ளிப்போடுவதாக தொழிலாளர் கட்சி தலைவர் சர் கீர் ஸ்டார்மர் குற்றம் சாட்டினார்.

நாடும் தொழிலாளர் கட்சியும் தேர்தலுக்கு தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், மக்களை எதிர்கொள்ள திராணியற்று ரிஷி சுனக் பிரதமர் இல்லத்தில் பதுங்கியிருக்கிறார் என்று லிபரல் டெமாக்ரட் தலைவர் சர் எட் டேவியும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

உண்மையில் பொதுத் தேர்தல் என்பது 2025 ஜனவரி 28ம் திகதி முன்னெடுக்கப்பட வேண்டும். ஆனால் இந்த ஆண்டு மே மாதத்தில் தேர்தலை முன்னெடுக்க வேண்டும் என்று லிபரல் டெமாக்ரட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

இந்த நிலையில், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும், பொருதார நிலைமைகளை சீரமைத்து, பொதுமக்களு வரிச்சலுகை அளிக்கவும் போதுமான அவகாசம் தேவைப்படுவதாகவும் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...