1597195 dgh
உலகம்செய்திகள்

ஹமாஸ் சுரங்க குழியில் இருந்து 5 பிணைக் கைதிகளின் உடல்கள் மீட்பு: இஸ்ரேல் ராணுவம் தகவல்

Share

ஹமாஸ் சுரங்க குழியில் இருந்து 5 பிணைக் கைதிகளின் உடல்கள் மீட்பு: இஸ்ரேல் ராணுவம் தகவல்

காஸாவில் ஹமாஸ் அமைத்த சுரங்க குழியில் இருந்து 5 பிணைக் கைதிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மீது கடந்த ஒக்டோபர் 7-ம் திகதி காஸா முனையில் செயல்படும் ஹமாஸ், இஸ்லாமிக் ஜிகாத் போன்ற ஆயுதக்குழுக்கள் பயங்கரவாத தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் இஸ்ரேலில் உள்ள 1,139 பேர் கொல்லப்பட்டனர்.மேலும், இஸ்ரேலில் இருந்து 240 பேரை பிணைக் கைதிகளாக காஸாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.

இதனைத்தொடர்ந்து, ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது இஸ்ரேல் போர் அறிவித்தது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் போர் நடத்தி வருகிறது. ஹமாஸ் தாக்குதலுக்கு திருப்பி கொடுப்பதாக நினைத்து நடைபெற்று வரும் போரில் இதுவரை 20,424 பாலஸ்தீன மக்கள் உயிரிழந்துள்ளனர்.

எந்த நாடுகள் கூறினாலும், ஐ.நாவின் போர் நிறுத்த கோரிக்கைகளையும் கேட்காமல் பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் போர் தொடுத்து வருகிறது.

இதனிடையே, காஸாமுனையில் உள்ள பிணைக் கைதிகளில் 100க்கும் மேற்பட்டோரை ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் விடுவித்தது.

இதனையடுத்து, பிணைக்கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் ஈடுப்பட்டு வந்தது. இந்நிலையில், காஸாமுனையில் உள்ள 5 பேர் பிணமாக மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

அதாவது, இடன் சிஷெர்யா, சிவ் டடூ, எலியொ டுலிடனொ, நிக் பெய்சர், ரொன் ஷெர்மென் ஆகிய 5 பேரை ஹமாஸ் பதுங்கு குழியில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப்படையினர் பிணமாக மீட்டுள்ளனர். மேலும், இவர்களின் சடலங்களை இஸ்ரேல் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோவையும் ட்விட்டர் எக்ஸ் தளத்தில் இஸ்ரோ ராணுவம் பகிர்ந்துள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....