உலகம்செய்திகள்

நியூயார்க்கில் குடும்பம் ஒன்றிற்கு நேர்ந்த சோகம்: பொலிஸாரை தாக்கிய நபர் மீது துப்பாக்கி சூடு

Share

நியூயார்க்கில் குடும்பம் ஒன்றிற்கு நேர்ந்த சோகம்: பொலிஸாரை தாக்கிய நபர் மீது துப்பாக்கி சூடு

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள வீடு ஒன்றில் நடத்த கத்திக்குத்து தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உட்பட 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நியூயார்க்கின் குயின்ஸ் நகரின் ஃபார் ராக்வே சுற்றுப்புறத்தில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இளம் பெண் ஒருவர் தன்னுடைய உறவினர் தனது குடும்ப உறுப்பினர்களை தாக்கி கொல்வதாக பொலிஸாருக்கு 911ல் அவசர அழைப்பு கொடுத்துள்ளார்.

அதனடிப்படையில் சம்பவ இடத்தை ஆராய இரண்டு பொலிஸார் அனுப்பப்பட்ட நிலையில், தீ வைக்கப்பட்ட அந்த வீட்டில் இருந்து பாதிக்கப்பட்டவர்களை பொலிஸார் கண்டுபிடித்தனர்.

சம்பந்தப்பட்ட வீட்டை பொலிஸ் அதிகாரிகள் சோதனையிட உள்ளே சென்ற போது, ஆண் ஒருவர் பொருள்களுடன் வெளியேறுவதை பார்த்துள்ளனர்.

உடனே அவரை தடுத்து பேச முயன்ற போது, அந்த நபர் தன்னிடம் இருந்த கத்தியால் 2 பொலிஸ் அதிகாரிகளையும் குத்தியுள்ளார். இதனால் 2 பொலிஸ் அதிகாரிகளில் ஒருவர் தங்களுடைய தற்காப்பிற்காக துப்பாக்கியை எடுத்து அந்த நபரை சுட்டுக் வீழ்த்தியுள்ளார்.

சுட்டு வீழ்த்தப்பட்ட நபர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டும், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டார்.

சம்பவ இடத்திற்கு தீயணைப்பு மற்றும் மீட்பு குழு சென்ற பிறகு அவசர சேவைகள் வீட்டிற்குள் இருந்து 12 வயது சிறுவன், 44 வயது பெண் மற்றும் 30 வயது ஆண் ஆகிய 3 பேரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

அத்துடன் வாசலில் காயங்களுடன் நின்ற 11 வயது சிறுமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிறுமியும் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இதற்கிடையில் இந்த தாக்குதல் சம்பவத்தை அரங்கேற்றியவர் 39 வயதான கோர்ட்னி கார்டன் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக முதற்கட்ட விசாரணையை பொலிஸார் தொடங்கியுள்ளனர்.

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...