உலகம்செய்திகள்

உக்ரைன் விட்டு வெளியேற முயன்ற முன்னாள் ஜனாதிபதி: எல்லையில் திருப்பி அனுப்பியதற்கான காரணம்?

2 scaled
Share

உக்ரைன் விட்டு வெளியேற முயன்ற முன்னாள் ஜனாதிபதி: எல்லையில் திருப்பி அனுப்பியதற்கான காரணம்?

நாட்டை விட்டு வெளியேற சென்ற உக்ரைன் முன்னாள் ஜனாதிபதி பெட்ரோ போரோஷென்கோ எல்லையில் தடுத்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

உக்ரைனின் முன்னாள் ஜனாதிபதி பெட்ரோ போரோஷென்கோ தனது வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக உக்ரைனை விட்டு வெளியேறிய முடிவு செய்துள்ளார்.

இந்த வெளிநாட்டு சுற்றுப் பயணத்தின் போது அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் மைக் ஜான்சனை சந்தித்து உரையாட திட்டமிட்டு இருந்தார், இதையடுத்து ஹங்கேரி பிரதமர் விக்டர் ஆர்பனை சந்திக்கவும் முடிவு செய்து இருந்தார்.

ஹங்கேரி ஜனாதிபதி விக்டர் ஆர்பன் ரஷ்ய ஜனாதிபதி புடினை பாராட்டி பேசியதோடு, உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேருவதற்கு தனது ஆதரவை ஹங்கேரி வழங்க மறுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

எனவே ஹங்கேரி பிரதமர் விக்டர் ஆர்பனை சந்திக்க முன்னாள் ஜனாதிபதி பெட்ரோ போரோஷென்கோ நாட்டை விட்டு வெளியேறிய முயன்றதால் அவர் எல்லையில் திருப்பி அனுப்பப்பட்டார் என உக்ரைன் பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் நாடாளுமன்ற அனுமதி தனக்கு இருந்தும் என்னை அவர்கள் திருப்பி அனுப்பியது ஒற்றுமை மீதான தாக்குதல் என முன்னாள் ஜனாதிபதி பெட்ரோ போரோஷென்கோ தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் ராணுவ சட்டத்தின் படி, 18 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் நாட்டை விட்டு வெளியேற சிறப்பு அனுமதி பெற்று இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...