உலகம்செய்திகள்

பிரான்ஸ் தலைநகரில் இனவெறித் தாக்குதல்

tamilni 46 scaled
Share

பிரான்ஸ் தலைநகரில் இனவெறித் தாக்குதல்

இஸ்லாமியர்கள் அதிகளவில் கொல்லப்படுவதாக தெரிவித்து விரக்தியடைந்த இளைஞன் ஒருவர் பரிஸில் ஈபிள் கோபுரம் அருகே கத்திகுத்து தாக்குதல் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பரிஸில் ஈபிள் கோபுரம் அருகே நேற்று (02.12.2023) இரவு குறித்த நபரால் நடத்தப்பட்ட தாக்குதலில் ஜெர்மனியை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரான்ஸைச் சேர்ந்த 26 வயது இளைஞன் ஒருவரே இவ்வாறு கத்தி ஒன்றினை பயன்படுத்தி தாக்குதலில் ஈடுபட்டுள்ளதுடன் பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளதாக பிரான்ஸ் நாட்டின் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானா தனது x தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பலஸ்தீன் மற்றும் ஆப்கானிஸ்தானில் இஸ்லாமியர்கள் அதிகளவில் கொல்லப்படுவதால் விரக்தியில் இவ்வாறு செய்ததாக குறித்த இளைஞன் பொலிஸாரின் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

மேலும், இவர் ஏற்கனவே 4 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டு 2020ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டு பொலிஸார் மற்றும் மன நல மருத்துவரின் கண்காணிப்பின் கீழ் வசித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...