3 19 scaled
உலகம்செய்திகள்

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை இன அழிப்பாளர் என துருக்கி ஜனாதிபதி எர்டோகன் சாடல்

Share

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை இன அழிப்பாளர் என துருக்கி ஜனாதிபதி எர்டோகன் சாடல்

காசாவில் செய்த குற்றங்களுக்கு இஸ்ரேலை சர்வதேச நீதிமன்றத்தில் பொறுப்பேற்க வைக்க துருக்கி முயல்கிறது என அந்நாட்டின் ஜனாதிபதி எர்டோகன் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் கடந்த அக்டோபர் மாதம் 7ம் திகதி தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், காசாவில் கடந்த 4 நாட்களாக போர் நிறுத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த போர் நிறுத்தத்தின் மூலம் பாதிப்புக்குள்ளாகி உள்ள காசா மக்களுக்கு தேவையான மருத்துவ மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வது மற்றும் பிணைக் கைதிகளை பரஸ்பரம் பரிமாறி கொள்வது ஆகியவை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் சமீபத்தில் பேசி இருந்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, போர் நிறுத்தம் நிறைவடைந்த உடன் இஸ்ரேல் ராணுவம் மீண்டும் தாக்குதலை முன்னெடுக்கும் என தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் காசாவில் பேரழிவை செய்த இஸ்ரேலை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி, அதற்கான பொறுப்பை ஏற்க செய்ய துருக்கி முயன்று வருவதாக அந்நாட்டின் ஜனாதிபதி எர்டோகன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் காசாவில் உள்ள எனது சகோதரர்கள் மனித குலத்தின் மிகவும் மோசமான தாக்குதலை சந்தித்துள்ளனர், உலகின் அனைத்து மனிதாபிமானத்தின் கண்கள் முன்பே அவர்களின் குடும்பத்தை, இனக்குழுவை இஸ்ரேல் அழித்து வருகிறது.

இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய அட்டூழியத்தை காசாவில் நிகழ்த்தியுள்ளார், இதனால் அவரது பெயர் ஏற்கனவே காசாவை அழித்தவர் என ஏற்கனவே அவர் பெயர் எழுதி வைக்கப்பட்டு விட்டது என எர்டோகன் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...