rtjy 196 scaled
உலகம்செய்திகள்

இஸ்ரேல் ஆதரவு நாடுகளுக்கு சவுதி வலியுறுத்து

Share

இஸ்ரேல் ஆதரவு நாடுகளுக்கு சவுதி வலியுறுத்து

இஸ்ரேலுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதை உடன் நிறுத்துமாறு சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான் உலக நாடுகளை வலியுறுத்தியுள்ளார்.

தென்னாப்பிரிக்கா இணையமூடாக முன்னெடுக்கும் பிரிக்ஸ்(BRICS) உச்சி மாநாட்டில் இஸ்ரேல் – ஹமாஸ் போர் தொடர்பில் விவாதிக்கப்பட உள்ளது.

இந்த நிலையிலேயே இஸ்ரேலுக்கான ஆயுத ஏற்றுமதியை கைவிட வேண்டும் என்று அனைத்து நாடுகளுக்கும் இளவரசர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

“பாலஸ்தீன அரசை நிறுவுவதற்கு தீவிரமான மற்றும் விரிவான அமைதி செயல்முறையைத் தொடங்க வேண்டும்.

சவுதி அரேபியாவின் நிலை என்பது நிலையானது மற்றும் உறுதியானது. இரு நாடு தீர்வு தொடர்பான சர்வதேச முடிவுகளை நடைமுறைப்படுத்துவதைத் தவிர பாலஸ்தீனத்தில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை அடைய வழி இல்லை.

அப்பாவி மக்கள் கொல்லப்படுவது காசா பகுதியில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கை ஏற்றுக்கொள்வதாக இல்லை. இவை அனைத்தும் உடனே நிறுத்தப்பட வேண்டும்.

காசா பகுதியில் இருந்து வலுக்கட்டாயமாக பாலஸ்தீன மக்கள் வெளியேற்றப்படுவதை சவுதி அரேபியா ஏற்கவில்லை.

அங்கு மனிதாபிமான நிலைமைகள் மோசமடைவதைத் தடுக்க கூட்டு முயற்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 7ஆம் திகதி முதல் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது தவிர்க்கப்பட்ட வேண்டும் என்று சவுதி அரேபியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், இஸ்ரேல் தாக்குதலுக்கு இதுவரை கொல்லப்பட்ட பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 14,128 என்றும் இதில் சிறார்கள் எண்ணிக்கை 4,000 கடந்துள்ளது என்றும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்” என்றார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...