F231012CG201 1320x880 1 scaled
உலகம்செய்திகள்

காசா மீதான தங்கள் பிடியை ஹமாஸ் இழந்து வருகிறார்கள் – இஸ்ரேலிய பாதுகாப்பு படை

Share

காசா மீதான தங்கள் பிடியை ஹமாஸ் இழந்து வருகிறார்கள் – இஸ்ரேலிய பாதுகாப்பு படை

இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஹமாஸ் காசா மீதான தங்கள் பிடியை இழந்து வருகின்றனர் என இஸ்ரேலிய பாதுகாப்புப்படையின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் வான் மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் 11,078 பேர் கொல்லப்பட்டதாகவும், அவர்களில் 40 சதவீதம் பேர் குழந்தைகள் என்றும் பாலஸ்தீனிய அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அன்று தெரிவித்தனர்.

இதனையடுத்து தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸில் உள்ள ஒரு வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இஸ்ரேலிய தற்காப்புப் படைகளின் தாக்குதலினால் ஹமாஸ் காசா மீதான தங்கள் பிடியை இழந்து வருகின்றனர் என IDF மூத்த செய்தித் தொடர்பாளர் ஜோனாதன் கான்ரிகஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘கீழ்ப்படியாமை, கொள்ளையடித்தல் மற்றும் சமூக ஊடகங்களில் ஹமாஸ் மீதான முன்னோடி இல்லாத விமர்சனங்கள், காசாவில் ஹமாஸின் கட்டுப்பாடு நழுவி வருவதைக் காட்டுகின்றன. எங்கள் மதிப்பீடு என்னவென்றால், அவர்களின் கட்டளை செயல்பாடுகள் மற்றும் இராணுவ நடவடிக்கைகளை திறம்பட நடத்துவதற்கும், மக்களை ஒரே நேரத்தில் கட்டுப்படுத்துவதற்கும் அவர்களின் திறன் ஆகியவை சவாலாக உள்ளன’ என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...