rtjy 220 scaled
உலகம்செய்திகள்

இந்தியாவின் செயலால் உருவாகியுள்ள புதிய பிரச்சினை

Share

இந்தியாவின் செயலால் உருவாகியுள்ள புதிய பிரச்சினை

கனேடிய தூதரக அதிகாரிகளை இந்தியா வெளியேற்றியுள்ளதால், இந்தியர்களுக்கான விசா பரிசீலனை தாமதமாகும் என கனடா புலம்பெயர்தல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஜூன் மாதம் 18ஆம் திகதி, சீக்கிய பிரிவினைவாத அமைப்பொன்றின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜர் என்பவர் கனடாவில் கொல்லப்பட்ட நிலையில், அந்த சம்பவத்தின் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாக குற்றம் சாட்டியிருந்தார்.

அதைத் தொடர்ந்து இரு நாடுகளும் எடுத்த நடவடிக்கைகளால், இரு நாடுகளுக்குமிடையிலான தூதரக உறவில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில், கனேடிய தூதரக அதிகாரிகள் 41பேரை இந்தியாவிலிருந்து வெளியேற்றுமாறு இந்தியா கனடாவை அறிவுறுத்தியது. அதன்படி, அவர்கள் இந்தியாவிலிருந்து வெளியேறிவிட்டதாக கனடா வெளி விவகாரங்கள் துறை அமைச்சரான Mélanie Joly தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நேற்று ஊடகவியலாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய கனடா புலம்பெயர்தல் துறை அமைச்சரான Marc Miller, கனேடிய தூதரக அதிகாரிகள் இந்தியாவிலிருந்து வெளியேறியுள்ளதைத் தொடர்ந்து, கனடா வர விரும்பும் இந்தியர்களுக்கான விசா பரிசீலனை தாமதமாகும் என்று கூறியுள்ளார்.

கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பும், இந்தியாவில் அதன் அதிகாரிகளின் எண்ணிக்கையைக் குறைக்க இருப்பதாக புலம்பெயர்தல் துறை அமைச்சரான Marc Miller தெரிவித்துள்ளார்.

இதற்கு முன் இந்தியாவில் கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பின் அதிகாரிகள் 27 பேர் இருந்த நிலையில், அந்த எண்ணிக்கை வெறும் 5ஆக குறைக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியர்கள் கனடா விசா பெறுவதற்கான நடவடிக்கைகளை, இந்தியாவிலிருக்கும் கனேடிய அதிகாரிகளும் செய்யவேண்டியிருக்கும். அப்படிப்பட்ட நிலையில், இந்தியாவில் கனேடிய அதிகாரிகளின் எண்ணிக்கை குறைக்கப்படுவதால், இனி இந்தியர்களின் விசா பரிசீலனை தாமதமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

கனேடிய தூதரக அதிகாரிகளை இந்தியா வெளியேற்றியுள்ளதால் உருவாகியுள்ள புதிய பிரச்சினை | India Visa Processing Will Slow

Share
தொடர்புடையது
image 1200x800 41
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை அமைச்சரவையின் புதிய முடிவு: வீடற்ற துறவிகளின் பெற்றோர்களுக்கு 15 இலட்சம் ரூபாய் நிதி உதவி.

பௌத்த சாசனத்தின் நிலைத்தன்மைக்காகத் தங்களது பிள்ளைகளைத் துறவற வாழ்விற்கு அர்ப்பணித்த, பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பெற்றோர்களைக்...

image 1200x800 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை: இலங்கையின் எந்தெந்தப் பகுதிகளில் மழை பெய்யும்?

இலங்கையின் தென்கிழக்கே, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு நிலை நீடித்து வருவதால்,...

image 1200x800 32
செய்திகள்அரசியல்இலங்கை

சமன் ஏக்கநாயக்கவின் பிணை மனு: இன்று தீர்ப்பு! – ஜனாதிபதியின் வெளிநாட்டுப் பயண நிதி விவகாரத்தில் அதிரடி!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயலாளராகப் பணியாற்றிய சமன் ஏக்கநாயக்க, இன்று (18) மீண்டும் கொழும்பு...

image 1200x800 30 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பிறப்புச் சான்றிதழுக்கு ரூ. 1,000 இலஞ்சம்: ஆலையடிவேம்பு உதவிப்பதிவாளர் கையும் மெய்யுமாகக் கைது!

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளராகப் பணியாற்றும் உதவிப்பதிவாளர் ஒருவர், பிறப்புச் சான்றிதழை...