உலகம்செய்திகள்

இஸ்ரேல் – ஹமாஸ் போரில் ஊடகவியலாளர்கள் பலர் பலி

Share
hq720 7 scaled
Share

இஸ்ரேல் – ஹமாஸ் போரில் ஊடகவியலாளர்கள் பலர் பலி

இஸ்ரேல் இராணுவத்திற்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையிலான மோதல்களில் குறைந்தபட்சம் 15 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 7ம் திகதி ஹமாஸ் போராளிகள், இஸ்ரேல் மீது தாக்குதல் நடவடிக்கையை ஆரம்பித்திருந்தனர்.

இந்த நிலையில், மோதல்கள் ஆரம்பானது முதல் முன்னரங்கப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஊடகவியலாளர்கள் சேவையாற்றி வருகின்றனர்.

ஹமாஸ் போராளிகள் தாக்குதல் நடத்த ஆரம்பித்தது முதல் இதுவரையில் குறைந்தபட்சம் 15 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர்களில் அதிக எண்ணிக்கையிலான ஊடகவியலாளர்கள் பலஸ்தீனியர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

11 பலஸ்தீன ஊடகவியலாளர்களும், மூன்று இஸ்ரேல் ஊடகவியலாளர்களும், ஒரு லெபனான் ஊடகவியலாளரும் தாக்குதல்களில் உயிரிழந்துள்ளனர்.

ஊடகவியலாளர்கள் பாரிய தியாகத்துடன் போர் பற்றிய சகல உண்மைகளையும் வெளிச்சம் போட்டு காட்டி வருவதாக சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளது.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...