tamilni 217 scaled
உலகம்செய்திகள்

காசாவை இஸ்ரேல் ஆக்கிரமிப்பது தவறு: ஜோ பைடன் அறிக்கை

Share

காசாவை இஸ்ரேல் ஆக்கிரமிப்பது தவறு: ஜோ பைடன் அறிக்கை

இஸ்ரேல் மீண்டும் காசாவை முழுமையாக ஆக்கிரமிப்பது மிகப் பெரிய தவறாக முடியும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.

வெளிநாட்டு ஊடகம் ஒன்றிற்கு அளித்த நேர்காணலில் பைடன் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

இஸ்ரேலுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்த பைடன் தற்போது பாலஸ்தீனத்திற்காகவும் குரல் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேர்காணலில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர் , ஹமாஸ் இயக்கத்தை அழிப்பது அவசியம். ஆனால் ஹமாஸ் பிடியில் உள்ள காசாவை முழுவீச்சில் இஸ்ரேல் ஆக்கிரமிக்க நினைப்பது தவறு.

அத்துடன் ஹமாஸ் இயக்கமானது பாலஸ்தீன மக்களின் பிரதிநிதிகள் அல்ல. ஹமாஸ் குழுவை பாலஸ்தீனர்கள் குரலாக நினைத்துக் கொள்ளக் கூடாது எனவும் பைடன் தெரிவித்துள்ளார்.

மேலும் போரில் குழந்தைகளும் பெண்களும் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

போரில் இஸ்ரேலுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா வழங்கும் என உறுதியளித்த பைடன் இஸ்ரேல் போர் விதிகளுக்கு உட்பட்டு நடக்கும் என நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...