6 7 scaled
உலகம்செய்திகள்

ஹமாஸின் தாக்குதல் கொடூரமான அட்டூழியம்! அவர்கள் எதிர்த்து போராட அனைத்தையும் செய்வேன் – சூளுரைத்த இஸ்ரேல் நடிகை

Share

ஹமாஸின் தாக்குதல் கொடூரமான அட்டூழியம்! அவர்கள் எதிர்த்து போராட அனைத்தையும் செய்வேன் – சூளுரைத்த இஸ்ரேல் நடிகை

ஹமாஸை எதிர்த்து போராட தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

Fauda எனும் வெப் சீரிஸில் நடித்து வருபவர் நடிகை ரோனா லீ ஷிமோன் (40).

இவர் ஹமாஸின் தாக்குதலில் அப்பாவி மக்கள் பலியானதால் ஆழ்ந்த மனவேதனை அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இஸ்ரேல் – ஹமாஸ் போர் குறித்து அவர் பேசும்போது, ‘நாங்கள் ஒரு போருக்கு இடையில் இருக்கிறோம். இது பல உயிர்களுக்கு மேலும் துன்பத்தை விளைவிக்கும், ஆனால் நாங்கள் வெற்றி பெறுவோம். நாங்கள் தயாராகி வருகிறோம். எங்கள் பணயக்கைதிகளை வீட்டிற்கு அழைத்து வருவதே எங்கள் முதல் முன்னுரிமை’ என்றார்.

அதனைத் தொடர்ந்து நேர்காணலில் சில கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், பூமியில் உள்ள ஒவ்வொரு நாடும் இதில் தலையிட்டு, எங்கள் மக்களை மீட்டு வர தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் என்று நினைப்பதாக கூறினார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘அவர்களிடம் (ஹமாஸ்) 36 நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் பணயக் கைதிகளாக இருக்கிறார்கள். இந்தியாவைப் போன்ற ஒரு நட்பு நாட்டின் ஆதரவுக்கு நன்றியுடன் உணர்கிறேன். இஸ்ரேலுக்காக களமிறங்கி போரிட தயாராக இருக்கிறேன். இஸ்ரேலை வெற்றி பெற செய்ய என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்’ என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...