tamilni 147 scaled
உலகம்செய்திகள்

இணையத்தில் கேலி கிண்டலுக்கு ஆளாகிவரும் கனடா பிரதமர்

Share

இணையத்தில் கேலி கிண்டலுக்கு ஆளாகிவரும் கனடா பிரதமர்

கனேடிய குடிமகன் ஒருவர் கனடாவில் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனேடிய பிரதமர் கூறியதால் மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் சிலர் சீரியஸாக கருத்துக்கள் கூறத்துவங்கிய நிலையில், அவர் இந்தியா தொடர்பான பிரச்சினை குறித்து சம்பந்தமேயில்லாமல் பல்வேறு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதால் இணையத்தில் கடுமையாக கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகி வருகிறார்.

கனேடிய குடிமகன் ஒருவர் கனடாவில் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, கனடா இந்திய தூதரக உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் சம்பந்தமேயில்லாத நாடுகளுடன் எல்லாம் இந்தியா குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகிறார்.

முதலில் ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியான Mohamed Bin Zayedஉடன் பேச்சுவார்த்தை நடத்திய ட்ரூடோ, பின்னர் ஜோர்டான் நாட்டின் மன்னரான Abdullah II bin Al-Husseinஉடன் இந்தியா குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இப்படி இந்தியா கனடா பிரச்சினைக்கு சம்பந்தமில்லாத நாடுகளுடன் எல்லாம் ட்ரூடோ பேசி வருவதையடுத்து, இணையத்தில் அவர் கடுமையான கேலி கிண்டலுக்கு ஆளாகி வருகிறார்.

ட்ரூடோ குறித்த பல வேடிக்கையான மீம்கள் இணையத்தில் உலா வரத் துவங்கியுள்ளன.

Share
தொடர்புடையது
25 68f8957b5081f
செய்திகள்இலங்கை

செவ்வந்தி விவகாரத்திலிருந்து தப்பிய நபர் யார்? ஜே.கே.பாயின் திடுக்கிடும் வாக்குமூலம்

கணேமுல்ல சஞ்சீவ கொலையில் பிரதான குற்றவாளியான இஷாரா செவ்வந்தியை இந்தியாவிற்கு கடத்தியதில் சிலோன் பாய் என்ற...

25 68f7986211c31
செய்திகள்இலங்கை

வவுனியா மாநகர சபை செயற்பாடுகளுக்கு இடைக்காலத் தடை: மேலதிக ஆசனப் பிரச்சினைக்கு ஜனாதிபதி சட்டத்தரணி ஆஜர்!

வவுனியா மாநகர சபையின் செயற்பாடுகளுக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் எதிர்வரும் நவம்பர் 19ஆம் திகதி வரை இடைக்காலத்...

articles2FFRfdZpigOe1FxwuUE5O6
இலங்கைசெய்திகள்

இஷாரா செவ்வந்தியுடன் தொடர்புடைய நால்வர் யாழ். மற்றும் கிளிநொச்சியில் கைது!

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: இஷாரா செவ்வந்தியுடன் தொடர்புடைய நால்வர் யாழ், கிளிநொச்சியில் கைது! ஒழுங்கமைக்கப்பட்ட...

25 68f843287a66a
செய்திகள்இலங்கை

வடக்கு முதலமைச்சர் வேட்பாளர் தேர்வில் தேசிய மக்கள் சக்தி தீவிரம் – தமிழரசுக் கட்சியின் சுமந்திரனும் தயார்!

வரும் மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர்களாகக் களமிறங்கக்கூடிய நபர்கள் தொடர்பில் பிரதான கட்சிகள் தீவிர...