rtjy 117 scaled
உலகம்செய்திகள்

ரஷ்ய தூதர்களை வெளியேற்றிய அமெரிக்கா

Share

ரஷ்ய தூதர்களை வெளியேற்றிய அமெரிக்கா

அமெரிக்காவில் உள்ள இரண்டு ரஷ்ய தூதரக அதிகாரிகளை வெளியேற்ற பைடன் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்க தூதரகத்தில் பணிபுரிந்த ரஷ்ய பிரஜை ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறி அமெரிக்க தூதரக அதிகாரிகளை ரஷ்யா வெளியேற்றியுள்ளது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்காவின் இந்த நடவடிக்கை அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தூதரக அதிகாரிகளை வெளியேற்றும் ரஷ்யாவின் முடிவுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மாட் மில்லர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா தக்க பதிலடி கொடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

“எங்கள் தூதர்களை ரஷ்ய அரசாங்கம் துன்புறுத்துவதை பொறுத்துக்கொள்ள முடியாது. மேலும் மாஸ்கோவில் உள்ள எங்கள் தூதரக அதிகாரிகளுக்கு எதிராக ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கைகள் விளைவுகளை ஏற்படுத்தும்” என செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் போர் தொடர்பாக அமெரிக்காவுக்கும் ரஷ்யாவிற்க்கும் இடையே உக்கிரமான விரோதம் நிலவி வரும் நேரத்தில் இராஜதந்திரிகளின் வெளியேற்றங்கள் தற்போது சர்வதேச மட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Share
தொடர்புடையது
000 86jq4zl
செய்திகள்இலங்கை

இலங்கையில் புதிய சூறாவளி வதந்தி பொய்: டிச. 4-5இல் லேசான மழைக்கே வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கையில் வரும் நாட்களில் புதிய சூறாவளி ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பரவி வரும் வதந்திகள் தவறானவை என்று...

images 3
செய்திகள்உலகம்

சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல்: ஒரே வாரத்தில் 3 பேருக்குத் தூக்கு – இந்த ஆண்டு 17 மரண தண்டனைகள் நிறைவேற்றம்!

சிங்கப்பூரில் கடந்த ஒரு வாரத்தில் மூன்று பேர் போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்காகத் தூக்கிலிடப்பட்டனர். இதன் மூலம்...

images 2
செய்திகள்உலகம்

இஸ்ரேல் – ஹமாஸ் போர்: பலி எண்ணிக்கை 70,100ஐ அண்மித்தது!

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் போர் ஆரம்பித்ததிலிருந்து இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 70,100-ஐ அண்மித்துள்ளதாக காஸா...

dinamani 2025 11 28 gas8xazv AP25332344411320 750x430 1
செய்திகள்உலகம்

இந்தோனேஷியாவில் புயல் வெள்ளப் பலி 631 ஆக உயர்வு: மீட்புப் பணிகள் தொடர்கின்றன!

இந்தோனேஷியாவின் அசேப் மாகாணம் மற்றும் சுமத்ரா தீவில் கடந்த வாரம் ஏற்பட்ட புயல்கள் மற்றும் கடும்...