5 25 scaled
உலகம்செய்திகள்

புலம்பெயர்தலை நிறுத்துங்கள் என்று சுவிஸ் மக்கள் சொல்லும் நிலை உருவாகலாம்

Share

புலம்பெயர்தலை நிறுத்துங்கள் என்று சுவிஸ் மக்கள் சொல்லும் நிலை உருவாகலாம்

புலம்பெயர்தலை நிறுத்துங்கள் என்று சுவிஸ் மக்கள் சொல்லும் ஒரு நிலை உருவாகலாம் என சுவிஸ் முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கூறியுள்ளார்.

சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த சுவிஸ் முன்னாள் ஜனாதிபதியும், ஆளும் சுவிஸ் பெடரல் கவுன்சில் உறுப்பினருமான Guy Parmelin, புலம்பெயர்தலை நிறுத்துங்கள் என்று சுவிஸ் மக்கள் சொல்லும் ஒரு நிலை உருவாகலாம் என்று கூறியுள்ளார்.

கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்றொரு பழமொழி உண்டு. அதுபோல, உலக நாடுகள் பல திறன்மிகுப் பணியாளர் தட்டுப்பாட்டால் அவதியுற்று வருகின்றன. அதே நேரத்தில், புலம்பெயர்வோர் தங்கள் நாடுகளுக்கு வருவதை அவை ஏற்க மறுக்கின்றன.

சுவிட்சர்லாந்திலும் அந்த நிலை காணப்படுகிறது. பல துறைகளுக்கு திறன்மிகுப் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால், புலம்பெயர்தலை மக்கள் எதிர்க்கிறார்கள்.

சுவிஸ் மக்களின் பிரதிநிதியாக, அவர்களுடைய எண்ணங்களைத்தான் தற்போது வெளிப்படுத்தியுள்ளார் Guy Parmelin.

இப்படியே புலம்பெயர்தல் தொடரமுடியாது என்று கூறியுள்ள அவர், சுவிட்சர்லாந்தில் வீடுகள் பற்றாக்குறைக்கு பாதிக்குப் பாதி புலம்பெயர்ந்தோர்தான் காரணம் என்கிறார்.

புலம்பெயர்தல், திறன்மிகுப் பணியாளர்கள் தட்டுப்பாட்டை தீர்க்க உதவுகிறது. ஆனால், இப்படியே தொடரமுடியுமா என்பதில் எனக்கு சந்தேகம் உள்ளது என்று கூறும் Guy Parmelin, ஒரு கட்டத்தில் சுவிஸ் மக்கள், புலம்பெயர்தல் போதும் என கூறுவார்கள் என தன்னால் உறுதியாகக் கூறமுடியும் என்கிறார்.

Share
தொடர்புடையது
us troops
உலகம்உலகம்

ஈரானின் தாக்குதல்களில் அமெரிக்க ராணுவ வீரர்கள் பலி.

ஜோர்டானில் ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் இரண்டு அமெரிக்க இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன்...

kuwait airport
உலகம்

ஈரானின் தாக்குதல்களால் நிறுத்தப்பட்டது குவைத் விமான நிலையத்தின் சேவைகள்.

குவைத் சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுதல் மற்றும் தரையிறங்குதல் ஆகிய நடவடிக்கைகள், மத்திய கிழக்கில்...

VIETNAM BOAT
உலகம்

இரண்டு படகுகள் கவிழ்ந்ததா – 500 இற்கும் மேற்பட்டவர்கள் நிலை என்ன?

மியன்மார் கடற்கரையை அண்மித்த கடற்பகுதியில் 500க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகள் கவிழ்ந்திருக்கலாம்...

New Wave Of Attacks Iran That Lasted Seven Hours
உலகம்

அமெரிக்காவின் ஏழு மணிநேர தாக்குதல் – ஈரானின் ஏழு வீரர்கள் பலி.

ஈரானின் தென்கிழக்கு நகரமான பம்பூரில் உள்ள இராணுவத் தளத்தை குறிவைத்து அமெரிக்கா நடத்திய இரவுநேரத் தாக்குதல்களில்...