3 28 scaled
உலகம்செய்திகள்

பூனை என நினைத்து கருஞ்சிறுத்தையை வளர்த்த ரஷ்ய பெண்!

Share

பூனை என நினைத்து கருஞ்சிறுத்தையை வளர்த்த ரஷ்ய பெண்!

ரஷ்யாவைச் சேர்ந்த பெண்ணொருவர் பூனை என நினைத்து கருஞ்சிறுத்தையை வளர்த்தது பேசுபொருளாகியுள்ளது.

விக்டோரியா என்ற ரஷ்ய பெண், சைபீரியா காட்டுப் பகுதியில் கைவிடப்பட்ட பூனைக்குட்டி ஒன்றை கண்டுள்ளார்.

தனித்துவிடப்பட்ட அந்த உயிரினத்திற்கு காட்டில் ஆபத்து நேரிடலாம் என நினைத்த அவர், அதனை வீட்டிற்கு எடுத்துச் சென்று வளர்க்க ஆரம்பித்தார்.

லூனா என அதற்கு பெயரிட்டு மகிழ்ந்த விக்டோரியா, நாளடைவில் அதன் வளர்ச்சியைக் கண்டு மிரண்டுள்ளார். ஏனென்றால் லூனா பெரிதாக வளர்ந்த பின்பு தான் அது கருஞ்சிறுத்தை என்று தெரிய வந்துள்ளது.

எனினும் லூனா மீது கொண்ட அன்பினால் விக்டோரியாவுக்கு அதனை பிரிய மனமில்லை. எனவே, கருஞ்சிறுத்தையை வளர்ப்பதை தொடர்கிறார்.

மேலும் டிக்டாக்கில் லூனாவின் செயல்பாடுகளை பதிவிட்டு உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்றுள்ளார்.

என்ன தான் காட்டு விலங்காக இருந்தாலும், சிறு வயதில் இருந்தே வீட்டில் வளர்ந்ததால் மற்ற சிறுத்தைகள் போல் இல்லாமல் சாந்தமான விலங்காக லூனா இருப்பதாக விக்டோரியா கூறுகிறார்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....