4 3 scaled
உலகம்செய்திகள்

கட்டாயத் திருமணம், துஸ்பிரயோகம்… சிக்கலில் மொராக்கோ பெண்கள்

Share

கட்டாயத் திருமணம், துஸ்பிரயோகம்… சிக்கலில் மொராக்கோ பெண்கள்

மொராக்கோவில் மொத்தமாக புரட்டிப்போட்ட நிலநடுக்கத்திற்கு பின்னர் கட்டாயத் திருமணம் மற்றும் துஸ்பிரயோகத்திற்கு பெண்கள் இரையாவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மொராக்கோவில் செப்டம்பர் 8ம் திகதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு ஆயிரக்கணக்கானோர் பலியாகினர். இந்த நிலையில், ஆதரவற்ற இளம் பெண்களை காக்கும் பொருட்டு, கிராமப் பகுதிகளுக்கு படையெடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மட்டுமின்றி, சமூக ஊடகங்களில் ஆண்கள் பலர், ஆதரவற்ற பெண்களை திருமணம் செய்து கொள்ள தயார் எனவும் விளம்பரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இளம் பெண்களை துஸ்பிரயோகம் செய்யும் நோக்கில் பயணப்படுவதாக குறிப்பிட்ட 20 வயது மாணவன் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இப்படியான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் மகளிர் அமைப்புகள் கோரிக்கை முன்வைத்து வருகின்றன. சிறார்கள் பலர் ஆபத்தான சூழலில் சிக்காமல் இருக்க, மொராக்கோ நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

பாதுகாப்பு அளிப்பதாக கூறி, வேறு நாடுகளுக்கு சிறார்களை கடத்தும் செயலும் முன்னெடுக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது. நிலநடுக்கத்திற்கு பிறகு பாலியல் துஸ்பிரயோகத்தின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தரவுகள் வெளியாகியுள்ளது.

ஆனால் மொராக்கோவை பொறுத்தமட்டில் அப்படியான சூழலில் சிக்கும் சிறார்கள் அல்லது பெண்களுக்கு ஆலோசனை அல்லது சேவையை வழங்கும் அமைப்புகள் ஏதும் மொராக்கோவில் இல்லை என்றே கூறப்படுகிறது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 21 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் முதல் வாகனங்களுக்குப் புதிய வரி! – அவசரப்பட்டு வாகனங்களை வாங்க வேண்டாம் என இறக்குமதியாளர்கள் சங்கம் கோரிக்கை!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் 1, 2026 முதல் 2.5 சதவீத சமூக...

image 1200x800 20 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வைத்தியர் சத்தியமூர்த்தி அதிரடி முறைப்பாடு! – மக்கள் எழுச்சி கட்சி நிறுவனருக்கு எதிராகப் பொலிஸார் விசாரணை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி அவர்கள், அகில இலங்கை மக்கள் எழுச்சி...

image 1200x800 19 2
செய்திகள்இந்தியா

இஸ்ரேல் செல்லும் பிரதமர் மோடி! – 56 இராணுவ நிறுவனங்களுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 25-ஆம் திகதி இஸ்ரேலுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ...

001
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி-யில் ஆஜராகிறார் பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க! – நிதி துஷ்பிரயோக வழக்கில் பரபரப்பு விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நிதி முறைகேடு தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, அவரது...