rtjy 82 scaled
உலகம்செய்திகள்

புதிய அணு ஆயுத நீா்முழ்கிக் கப்பல்: வடகொரியா அறிவிப்பு

Share

புதிய அணு ஆயுத நீா்முழ்கிக் கப்பல்: வடகொரியா அறிவிப்பு

அணு ஆயுதத் தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட புதிய நீா்முழ்கிக் கப்பலை உருவாக்கியுள்ளதாக வட கொரியா அறிவித்துள்ளது.

இது குறித்து அந்த நாட்டு அரசுக்குச் சொந்தமான கேசிஎன்ஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

அணு ஆயுதங்களை ஏந்திச் சென்று, எதிரிகளின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட புதிய நீா்மூழ்கிக் கப்பலை வட கொரிய பொறியாளா்கள் உருவாக்கியுள்ளனா்.

‘ஹீரோ கிம் குன் ஆக்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நீா்முழ்கிக் கப்பல், கடலின் மேற்பரப்புக்கு வராமல் நீருக்குள் இருந்தபடியே ஆயுதங்களை ஏவும் வல்லமை கொண்டது என தெரிவித்துள்ளது.

எனினும், வட கொரியா கூறும் அளவுக்கு அந்த நீா்மூழ்கிக் கப்பலின் செயல்திறன் இருப்பது குறித்து தென் கொரிய அதிகாரிகள் சந்தேகம் எழுப்பியுள்ளனா்.

மேலும், அந்த நீா்மூழ்கிக் கப்பல் பயன்படுத்துவதற்கு தயாரான நிலையில் இருப்பதற்கான வாய்ப்பில்லை என்றும் அவா்கள் கூறியுள்ளனர்.

1950-53-ஆம் ஆண்டின் கொரிய போருக்குப் பிறகு அமெரிக்காவும், தென் கொரியாவும் இணைந்து அவ்வப்போது கூட்டு இராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இது, தங்களது நாட்டின் மீது போா் தொடுப்பதற்கான ஒத்திகை என்று வட கொரியா கருதுகிறது.

அத்தகைய பயிற்சிகள் நடந்தால் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வட கொரியா ஏவுகணைகளை வீசி சோதித்து வருகிறது.

இந்தச் சூழலில், தனது அணு ஆயுதத் தாக்குதல் திறனை வெளிப்படுத்தும் வகையில் ஆளில்லா நீா்முழ்கியை உருவாக்கியுள்ளதாக ஏற்கெனவே அறிவித்துள்ள வட கொரியா, அணு ஆயுதத் தாக்குதல் திறன் கொண்ட நீா்மூழ்கிக் கப்பலை உருவாக்கியுள்ளதாக தற்போது அறிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
articles2FeEKtDKWyXj0ebdxP7pcx
செய்திகள்உலகம்

வரலாற்று வெற்றி: அமெரிக்காவிடமிருந்து மீட்கப்படும் 3 பழைமைவாய்ந்த சோழர் காலச் சிலைகள்!

தமிழகத்தின் பல்வேறு ஆலயங்களில் இருந்து திருடப்பட்டு அமெரிக்காவிற்குக் கடத்தப்பட்ட மிகவும் பழைமைவாய்ந்த மூன்று சோழர் காலச்...

image 3a35841713
செய்திகள்இலங்கை

இலங்கையின் சுகாதாரத் துறையில் புதிய திருப்பம்: அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஒரே குழுவாக ஒன்றிணைந்து செயற்பட இணக்கம்!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று சபைக்கும் அனைத்து சுகாதார தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று...

rajith
செய்திகள்இலங்கை

ராஜித சேனாரத்ன மீதான ஊழல் வழக்கு: விசாரணையின் முன்னேற்ற அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு!

மீன்பிடித் துறைமுக மணல் அகழ்வுத் திட்டத்தில் அரசாங்கத்திற்குப் பாரிய நட்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் ஊழல் வழக்குத்...

images 1 8
செய்திகள்இலங்கை

சதொச வெள்ளைப்பூண்டு மோசடி: முன்னாள் விநியோக முகாமையாளர் உட்பட 3 பேர் கைது – பிணையில் விடுதலை!

2021 ஆம் ஆண்டு லங்கா சதொச நிறுவனத்தின் வெள்ளைப்பூண்டு கையிருப்பினை விற்பனை செய்ததில் அரசாங்கத்திற்கு 17...