7 16 scaled
உலகம்செய்திகள்

இரவு 8 மணிநேரம் விஜயலட்சுமியிடம் தீவிர விசாரணை!

Share

இரவு 8 மணிநேரம் விஜயலட்சுமியிடம் தீவிர விசாரணை!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதுள்ள புகாரில் நடிகை விஜயலட்சுமியிடம் நேற்று இரவு 8 மணி நேரம் பொலிசார் விசாரணை செய்தனர்.

சமீபத்தில் சீமானை கைது செய்ய வேண்டும் என்று நடிகை விஜயலட்சுமி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.

அப்போது அவர், “சீமான் என்னை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றினார். அவர், என்னை பயன்படுத்திக் கொண்டார் கடைசியில் அவர் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்” என்றார்.

மேலும் அவர்,”சீமான் அரசியலில் ஒரு நிலை வரும்வரை குழந்தை வேண்டாம் என்று கூறிய நிலையில், நான் ஏழு முறை கருவுற்றேன். ஆனால், என்னை கட்டாய நிர்பந்தப்படுத்தி கருச்சிதைவு மாத்திரை கொடுத்தார்” எனக் கூறினார்.

இந்நிலையில், சென்னை, ராமாபுரம் காவல் நிலையத்தில், நேற்று இரவு 8மணிநேரம் விஜயலட்சுமியிடம் பொலிசார் விசாரணை செய்தனர். அப்போது, பலதரப்பட்ட விஷயங்களை பொலிசார் பெறப்பட்டதாக கூறப்படுகிறது.

சீமான் மீதான புகார் குறித்த கேள்விகளை துணை ஆணையர் உமையாள் நடிகை விஜயலட்சுமியிடம் கேட்டார். குறிப்பாக கருக்கலைப்பு மற்றும் மிரட்டியது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.

மேலும், இந்த விசாரணையின் போது நடிகை விஜயலட்சுமி காவல் நிலையத்தில் இருந்து வெளியேற மறுத்ததாகவும், சீமான் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று காலை சீமானுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Share

Recent Posts

தொடர்புடையது
articles2FDa64TGfTKDPmX85aOKjK
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள்: அவர்களை விடுவிக்கப் பாப்பரசர் லியோ உருக்கமான வேண்டுகோள்!

நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான...

24 66ce10fe42b0d
செய்திகள்இலங்கை

தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்’ என்று பொதுவெளியில்...

25 6925a9a6dc131
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற பெண் ஊழியர் மீதான பாலியல் அத்துமீறல் புகார்: ஓய்வுபெற்ற நீதிபதியின் அறிக்கையில் முக்கிய முடிவு!

நாடாளுமன்ற பெண் ஊழியர் ஒருவர் மீது பாலியல் அத்துமீறல் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்பதை விசாரித்து அறிக்கை...