4 19 scaled
உலகம்செய்திகள்

ஜேர்மனியில் ரஷ்யர் ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறை

Share

ஜேர்மனியில் ரஷ்யர் ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறை

ஜேர்மனியில் ரஷ்யர் ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனியில் வாழ்ந்து வரும் ரஷ்ய நாட்டவரான Valid D என்பவர், சமூக ஆர்வலரான Mokhmad Abdurakhmanov என்பவரைக் கொல்ல திட்டம் தீட்டியதற்காக அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Valid, ஆயுதம் ஒன்றை வாங்கியதாகவும், கூலிக்கு கொலை செய்யும் ஒருவரை ஏற்பாடு செய்ததாகவும், அவரை ஜேர்மனிக்குக் கொண்டுவர ஏற்பாடு செய்ததாகவும், Mokhmadஇன் சகோதரரையும் அவரது வீட்டையும் வேவு பார்த்ததாகவும், துப்பாக்கி சுடும் பயிற்சி எடுத்ததாகவும் பல குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

இந்த கொலை முயற்சி, Mokhmadஐ அமைதியாக்குவதற்காக மட்டுமானதல்ல, அவரது சகோதரரான Tumso Abdurakhmanovஐ மிரட்டுவதற்காகவும்தான்.

ஜேர்மனியில் ரஷ்யர் ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறை: பின்னணி | 10 Years In Prison For A Russian In Germany

அதாவது, Tumso, செசன்யாவின் தலைவரான Ramzan Kadyrovஐ கடுமையாக விமர்சிப்பவர். அவர் செசன்யாவிலிருந்து தப்பியோடி ஸ்வீடனில் வாழ்ந்துவருகிறார்.

ஆகவே, அவரை மிரட்டுவதற்காகவும்தான் இந்த கொலை முயற்சி நடந்துள்ளது. Ramzan Kadyrovஇன் ஆதரவாளரான ஒருவரின் உத்தரவின் பேரிலேயே Mokhmadஐ கொல்லும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....