உலகம்செய்திகள்

மாஸ்கோ மீது மீண்டும் ட்ரோன் தாக்குதல்:100 விமானங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி

Share
2 14 1 scaled
Share

மாஸ்கோ மீது மீண்டும் ட்ரோன் தாக்குதல்:100 விமானங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி

ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீண்டும் ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 18 மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இரு நாடுகளின் வான் தாக்குதலும் சமீபத்தில் அதிகரித்து வருகிறது.

அதிலும் ரஷ்ய தலைநகர் மீதான உக்ரைனின் ட்ரோன் தாக்குதல் சமீபத்தில் நாட்களில் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இது தொடர்பாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி வெளியிட்ட கருத்தில், ரஷ்ய நிலப்பரப்பு மீதான தாக்குதல் போரில் தவிர்க்க முடியாதது என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது மீண்டும் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது, இதனால் கிட்டத்தட்ட 100 விமானங்கள் தாமதம் அடைந்துள்ளன.

இது தொடர்பாக மாஸ்கோ மேயர் தெரிவித்துள்ள தகவலில், நகரை நோக்கி வந்த உக்ரைனிய ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது, இதனால் 103 விமானங்கள் ரஷ்ய தலைநகரில் இருந்து வெளியேற முடியாமல் போனது.

வ்னுகோவோவில் இருந்து பிற புறப்பட வேண்டிய 34 விமானங்கள் இதனால் தாமதம் ஆனதுடன், 3 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைப்போல  டொமோடெடோவோவில் 63 விமானங்கள், ஷெரெமெட்டியோவில் 6 விமானங்கள் தாமதமாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...