2 13 scaled
உலகம்செய்திகள்

ஜேர்மனியில் பாழடைந்த கோட்டையில் நிர்வாண கோலத்தில் மர்ம மனிதன்

Share

ஜேர்மனியில் பாழடைந்த கோட்டையில் நிர்வாண கோலத்தில் மர்ம மனிதன்

ஜேர்மனியின் ஹார்ஸ் மலைப் பகுதியில் அமைந்துள்ள பாழடைந்த கோட்டையில் நிர்வாண கோலத்தில் மர்ம மனிதன் ஒருவரை நேரில் பார்த்துள்ளதாக சிலர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

ஜேர்மன் வனப்பகுதியில் கடந்த 5 ஆண்டுகளாக அந்த நபர் குடியிருந்து வருவதாக நம்பப்படுகிறது. அந்த மர்ம மனிதரின் புகைப்படத்தை இரு மலையேறும் பயிற்சி மேற்கொள்ளும் நபர்கள் பதிவு செய்து வெளியிட்டுள்ளனர்.

அந்த நபர் ஒரு பாழடைந்த கோட்டையின் அடிவாரத்தில் நிர்வாணமாக உட்கார்ந்து ஒரு மர ஈட்டியைப் பிடித்திருப்பதைக் கண்டுள்ளனர். தொலை தூரத்தில் இருந்து பதிவு செய்யப்பட்ட புகைப்படம் என்பதால், காட்சிகள் தெளிவாக பதிவாகவில்லை.

இருப்பினும், அந்த மனிதன் தரையில் அமர்ந்து மணலில் விளையாடுவது போல் காணப்படுகிறார். 31 வயதான Gina Weiss மற்றும் அவரது நண்பர் 38 வயதான Tobi ஆகிய இருவரும் செவ்வாய்க்கிழமை மதியத்திற்கு மேல் Blankenburg பகுதியில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்கள் ஒரு மணல் குகைகள் அருகே சென்றபோது அந்த மர்ம நபரை பார்த்ததாக குறிப்பிட்டுள்ளனர். மரத்தாலான ஈட்டியுடன் கற்கால நபர் போல நிர்வாண கோலத்தில் காணப்பட்டுள்ளார்.

அவருக்கு 40 வயதுக்கு மேல் இருக்கும் எனவும், சுமார் 10 நிமிடங்கள் அவர் அந்த பகுதியில் காணப்பட்டார் எனவும் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் Blankenburg பகுதியில் இதுபோன்ற மர்ம நபர்கள் தென்படுவது இது முதன்முறை அல்ல எனவும், கடந்த 5 வருடங்களில் பலர் இப்படியான தகவல்களை தெரிவித்துள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பு குறிப்பிட்டுள்ளது.

உண்மையில் அப்படியான நபர் அந்த வனப்பகுதியில் இல்லை எனவும், மக்களை ஏமாற்ற இதுபோன்ற புகைப்பட வதந்திகள் பரவலாக வெளியிடப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஜேர்மனியின் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதி அடர்ந்த காடுகளால் சூழப்பட்டுள்ளது. இதனாலையே மக்கள் இதுபோன்ற கட்டுக்கதைகளை உருவாக்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...