tamilni 253 scaled
இலங்கைசெய்திகள்

திலீபனின் நினைவேந்தல் பேரணியை தடை செய்ய கோரிக்கை

Share

திலீபனின் நினைவேந்தல் பேரணியை தடை செய்ய கோரிக்கை

தியாக தீபம் திலீபனை நினைவுகூறும் விதமாக நடத்தப்படும் பேரணியை தடை செய்யுமாறு யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸார் விண்ணப்பித்துள்ளனர்.

அரசியல் உரிமைகள் தொடர்பான தேசிய ஒருமைப்பாடுகள் சட்டத்தினை மீறி செயற்படுவதாக குறிப்பிட்டு இந்த பேரணியை தடை செய்யவேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

எனவே இது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் நேரடியாகவோ அல்லது சட்டத்தரணி ஊடாகவோ யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று (20.09.2023) காலை 9.30 மணியளவில் தோன்றுமாறு மன்று கட்டளையிட்டுள்ளது.

கடந்த (17.09.2023) ஆம் திகதி தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் ஊர்தியை மறித்து சில வன்முறையாளர்கள் தாக்குதல் சம்பவம் ஒன்றை மேற்கொண்டனர்.

இந்த சம்பவம் பல்வேறு தரப்பினரிமிருந்து கடும் கண்டனங்களுக்குள்ளாகியது. இந்த சம்பவத்தின் பின்னணியிலே தற்போது பொலிஸாரால் தடை விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்றையதினம் கொழும்பில் மருதானை, கோட்டை உள்ளிட்ட மேலும் சில பகுதிகளில் தியாக தீபம் திலீபனை நினைவுகூரும் நிகழ்வுகளை நடத்துவதற்குக் கோட்டை நீதிவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Accidentkojioh
இலங்கை

திருமணத்திற்கு 2 நாள் வெளிநாடு செல்ல 3 நாள் இளைஞர் விபத்தில் பலி!

மாத்தறை, அக்குரஸ்ஸ பகுதியில் சம்பவித்த கோர விபத்தில் இரண்டு தினங்களில் திருமணத்திற்கு தயாராக இருந்த 25...

ஷிரான் பாசிக்
இலங்கை

வறுமைக்கோட்டிலிருந்து டுபாய் வரை ஷிரான் பாசிக் தொடர்பில் வெளியாகும் உண்மைகள்!

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் தொடர்பில் பல தகவல்கள் தற்போது வெளியாகிய வண்ணம் உள்ளன....

கெஹெலிய
இலங்கை

கெஹெலிய ரம்புக்வெல்ல பிணையில் செல்ல அனுமதி!

இன்றைய தினம் காலை, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, வாக்குமூலமொன்றினை வழங்குவதற்காக சென்றிருந்த நிலையில்...

மஹீல் சேனாரத்ன
இலங்கை

மஹீல் சேனாரத்ன பிணையில் விடுதலை!

இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மஹீல் சேனாரத்ன இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை...