மொட்டையடிக்கப்பட்டு நிர்வாணமாக 12 ஆண்டுகள் கொடுமைப்படுத்தப்பட்ட பெண்: கொடூர சம்பவம்
உலகம்செய்திகள்

மொட்டையடிக்கப்பட்டு நிர்வாணமாக 12 ஆண்டுகள் கொடுமைப்படுத்தப்பட்ட பெண்: கொடூர சம்பவம்

Share

மொட்டையடிக்கப்பட்டு நிர்வாணமாக 12 ஆண்டுகள் கொடுமைப்படுத்தப்பட்ட பெண்: கொடூர சம்பவம்

பிரான்சிலிருந்து ஜேர்மன் பொலிசாருக்கு வந்த ஒரு தொலைபேசி அழைப்பு, பிரான்சில் குடியிருப்பு ஒன்றில் 12 ஆண்டுகளாக அடைத்துவைத்து கொடுமைப்படுத்தப்பட்ட பெண் ஒருவரிடமிருந்து வந்தது தெரியவரவே, உடனடியாக அவர்கள் பிரான்ஸ் பொலிசாருக்கு தகவலளித்துள்ளார்கள்.

மொட்டையடிக்கப்பட்டு நிர்வாண நிலையில் கண்டுபிடிக்கபட்ட பெண்
ஞாயிற்றுக்கிழமையன்று, ஜேர்மன் பொலிசாருக்கு ஜேர்மன் எல்லையிலுள்ள பிரெஞ்சு நகரமான Forbachஇல் அமைந்துள்ள வீடு ஒன்றிலிருந்து அவசர உதவி கோரி ஒரு அழைப்பு வந்துள்ளது.

உடனடியாக, ஜேர்மன் பொலிசார் Moselle பகுதியிலுள்ள பிரெஞ்சு பொலிசாரை எச்சரிக்கவே, பிரெஞ்சு பொலிசார் சம்பந்தப்பட்ட வீட்டுக்கு விரைந்துள்ளார்கள்.

நேற்று அந்த வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்த பொலிசார், அங்கு பெண் ஒருவர் அரை நிர்வாண நிலையில், தலை மொட்டையடிக்கப்பட்டு, திரைச்சீலைகளால் மூடப்பட்ட ஒரு அறைக்குள் அடைத்துவைக்கப்பட்டிருந்ததைக் கண்டுள்ளனர்.

அவரது கை விரல்களும், கால்களும் உடைக்கப்பட்டதற்கான அடையாளங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அந்த 53 வயது பெண்ணை மீட்ட பொலிசார் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ள நிலையில், அவரது நிலைமை மோசமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்த பெண்ணின் கணவனான அந்த 55 வயது நபர், 2011ஆம் ஆண்டு அந்தப் பெண்ணைக் கடத்தி வந்து அந்த வீட்டில் அடைத்தாராம். 12 ஆண்டுகளாக அங்கு அடைக்கப்பட்டிருந்த அந்தப் பெண் கையில், ஞாயிற்றுக்கிழமை அவரது கணவரின் மொபைல் தற்செயலாகக் கிடைக்கவே, அவர் ஜேர்மன் பொலிசாரை அழைத்து உதவி கோரியுள்ளார். அந்தப் பெண்ணும் அவரது கணவரும் ஜேர்மன் குடிமக்கள் ஆவர்.

அந்த 55 வயது ஆண் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த வீட்டில் அந்தப் பெண் சத்தமிடுவதை அக்கம்பக்கத்து வீடுகளில் வாழும் மக்கள் கேட்டதாக தற்போது பொலிசாரிடம் தெரிவித்துளார்கள்.

அப்போதெல்லாம், தன் மனைவி புற்றுநோயால் அவதியுற்று வருவதாகவும், தாங்க முடியாத வலியில் அவர் சத்தமிடுவதாகவும் அந்த நபர் கூறியதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இந்த சம்பவம் பிரான்சில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...