4 10 scaled
உலகம்செய்திகள்

கையில் பேனா வைத்து இருந்த நபரை துப்பாக்கியால் சுட்ட அமெரிக்க பொலிஸார்

Share

கையில் பேனா வைத்து இருந்த நபரை துப்பாக்கியால் சுட்ட அமெரிக்க பொலிஸார்

அமெரிக்காவில் கத்தியை கொண்டு தாக்க வருவதாக நினைத்து மார்க்கர் பேனாவை கையில் வைத்து இருந்த நபரை பொலிஸார் தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெற்ற துயர சம்பவம் ஒன்றின், கிராஃபிக் உடல் கேமரா காட்சிகளை டென்வர் காவல்துறை கடந்த திங்கட்கிழமை வெளியிட்டுள்ளது.

அதில், பிராண்டன் கோல் (Brandon Cole) என்ற 36 வயதுடைய நபர் கத்தியை கொண்டு தாக்க வருவதாக நினைத்து தற்காப்பிற்காக அவரை பொலிஸார் இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தியது பதிவாகியுள்ளது.

ஆனால் பிராண்டன் கோல் தன்னுடைய கையில் மார்க்கர் பேனா தான் வைத்து இருந்தார் என்பதை பின்னர் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் டென்வர் காவல்துறை இந்த துப்பாக்கி சூட்டை மிகப்பெரிய சோகம் என்று குறிப்பிட்டுள்ளது, அத்துடன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது.

CBS செய்திகள் படி, குடும்ப வன்முறை தொடர்பாக அண்டை வீட்டார் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு பொலிஸார் அழைக்கப்பட்டனர்.

அப்போது பிராண்டன் கோலை நோக்கி துப்பாக்கியை நீட்டிய பொலிஸாரை பார்த்து வீல் நாற்காலியில் அமர்ந்து இருந்த கோலின் மனைவி, “தயவு செய்து தனது கணவனை துப்பாக்கியால் சுட்டு விடாதீர்கள் என்று கெஞ்சினார்.

ஆனால் துரதிஷ்டவசமாக பொலிஸார் அவரது கணவர் பிராண்டன் கோலை தற்காப்பு நோக்கில் சுட்டனர் என தெரியவந்துள்ளது.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...