உலகம்செய்திகள்

உக்ரைனை பாடாய்படுத்தும் ரஷ்யா! 6 வயது சிறுமி உட்பட 7 பேர் ஏவுகணை தாக்குதலில் பலி

WhatsApp Image 2023 08 20 at 22.17.27 scaled
Share

உக்ரைனை பாடாய்படுத்தும் ரஷ்யா! 6 வயது சிறுமி உட்பட 7 பேர் ஏவுகணை தாக்குதலில் பலி

உக்ரைனிய நகரான செர்னிஹிவ் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 6 வயது சிறுமி உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

வடக்கு உக்ரைனிய பகுதியில் அமைந்துள்ள வரலாற்று நகரமான செர்னிஹிவ் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 6 வயது சிறுமி உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பாக பேசிய நகர மேயர் ஒலெக்சாண்டர் லோமகோ, ரஷ்யாவின் இந்த ஏவுகணை தாக்குதல் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 90 லிருந்து 117 ஆக உயர்ந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

மத விடுமுறையை கொண்டாடுவதற்காக தேவாலயத்திற்கு மக்கள் சென்று கொண்டு இருந்த போது இந்த தாக்குதல் அரங்கேறி இருப்பதாக உக்ரைனின் உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த தாக்குதலில் காயமடைந்தவர்களில் 12 பேர் குழந்தைகள் என்றும், 10 பேர் பொலிஸ் அதிகாரிகள் என்றும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

ஸ்வீடனுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இருந்த உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, ரஷ்யாவின் இந்த ஏவுகணை தாக்குதல் குறித்து டெலிகிராமில் பதிவிட்டுள்ள கருத்தில், சதுக்கம், பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் தியேட்டர்கள் அடங்கிய எங்கள் செர்னிஹிவ் நகரத்தின் மையத்தில் இந்த தாக்குதல் அரங்கேறியுள்ளது.

சாதாரண சனிக்கிழமை தினத்தை ரஷ்யா வலியும் இழப்பும் மிகுந்த நாளாக மாற்றியுள்ளது என தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...