ஜேர்மனியின் குடியுரிமை சட்டத்தில் ஏற்படவுள்ள மாற்றம்
உலகம்செய்திகள்

ஜேர்மனியின் குடியுரிமை சட்டத்தில் ஏற்படவுள்ள மாற்றம்

Share

ஜேர்மனியின் குடியுரிமை சட்டத்தில் ஏற்படவுள்ள மாற்றம்

ஜேர்மன் குடியுரிமை தொடர்பில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இந்த மாதமே ஜேர்மன் நாடாளுமன்றில் நடத்தப்பட உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

மேலும், ஜேர்மனியின் கோடை விடுமுறைக்குப் பிறகு பணிக்குத் திரும்பியுள்ள ஜேர்மன் நாடாளுமன்ற அமைச்சர்கள், ஜேர்மனியின் குடியுரிமைச் சட்டங்களை விரைவாக புதுப்பிக்கும் முயற்சிகளை ஆரம்பித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினரான ஸ்டீபன் தோமே, “குடியுரிமை சட்டமூலம் மீது, அடுத்த வாரம் அல்லது அதற்கு அடுத்த வாரத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படும்.

இன்னும் தெளிவாகக் கூறினால், இம்மாதம், மாதம் 23ஆம் திகதி அல்லது 30 ஆம் திகதி குடியுரிமை சட்டமூலம் நிறைவேற்றப்படலாம்.” என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், எதிர்வரும் செப்டம்பர் மாதம், சட்டமூலம் மீதான நாடாளுமன்ற வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
32 4
இலங்கைசெய்திகள்

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை – சாகர

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர்...

31 4
இலங்கைசெய்திகள்

மிரட்டுகின்றார் அநுர! சுமந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு

தங்களிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் உள்ளது என்றும், தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளது என்றும் ஜனாதிபதி...

30 5
இலங்கைசெய்திகள்

நீரில் மூழ்கிய நயினாதீவு படகுப் பாதை

நயினாதீவு – குறிகட்டுவான் இடையே சேவையில் ஈடுபட்ட நிலையில் நீண்ட காலமாக பழுதடைந்து சேவையில் ஈடுபட...

28 7
இலங்கைசெய்திகள்

இலங்கையும் இந்தியாவும் செய்து கொண்ட முக்கிய உடன்படிக்கை

இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ், கடன் வரி மற்றும் கொள்வனவாளர் கடன் ஒப்பந்தங்கள்...