கனடாவில் கல்வி கற்க காத்திருந்த மாணவர்களுக்கு ஏமாற்றம்
உலகம்செய்திகள்

கனடாவில் கல்வி கற்க காத்திருந்த மாணவர்களுக்கு ஏமாற்றம்

Share

கனடாவில் கல்வி கற்க காத்திருந்த மாணவர்களுக்கு ஏமாற்றம்

கனடாவில் கல்வி கற்பதற்கு தயாராக இருந்த இந்திய மாணவர்கள் சிலருக்கு கனடாவிலுள்ள கல்லூரி ஒன்று ஏமாற்றமளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கனடாவில் கல்வி கற்பதற்காக தயாராகியிருந்த இந்தியாவின் பஞ்சாபைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் கனடாவின் Scarborough வில் உள்ள Northern College எனும் கல்லூரியில் பயில்வதற்கு விண்ணப்பித்துவிட்டு காத்திருந்துள்ளனர்.

அடுத்த மாதத்தில் வகுப்புகள் ஆரம்பிக்க இருக்கும் நிலையில், திடீரென அவர்களுடைய விண்ணப்பங்கள் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக கல்லூரி நிர்வாகம் தகவல் அனுப்பியுள்ளது.

காத்திருந்த மாணவர்களில் பலர் விமான டிக்கெட்டுகளை வாங்கிவிட்டு, தங்குமிடத்துக்கும் பணம் செலுத்தியுள்ளனர்.

கனடாவிலுள்ள கல்லூரிகள் பல வருவாய்க்காக உள்ளூர் மாணவர்களைவிட வெளிநாட்டு மாணவர்களை சேர்த்துக்கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றன.

அத்துடன், விண்ணப்பிக்கும் எல்லா மாணவர்களுக்கும் விசா கிடைக்கப்போவதில்லை என கல்லூரி நிர்வாகம் அறிந்திருப்பதால் இது போன்ற கல்லூரிகள் கல்லூரியில் இருக்கும் இடங்களை விட அதிக விண்ணப்பப் படிவங்களை விநியோகிக்கின்றன.

இதனால் இருக்கைகளை மிஞ்சிய விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றமையால் அந்த மாணவர்களின் விண்ணப்பங்களை கடைசி நேரத்தில் ரத்து செய்யப்படுகின்றன.

எனினும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு முழு கல்விக்கட்டணத்தையும் திருப்பித் தருவதாகவும், அல்லதுவேறு கல்லூரிகளிலிருந்து அனுமதி கடிதங்கள் பெற்றுத்தருவதாகவும், இந்தக் கல்லூரியில் மாணவர்கள் கட்டியுள்ள கல்விக் கட்டணத்தை அந்தக் கல்லூரிகளுக்கு செலுத்திவிடுவதாகவும் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும் இந்த விடயங்களில் எந்தளவிற்கு உண்மைத்தன்மை உள்ளது என்பது சந்தேகமே.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Muthur
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாவிலாறு அணைக்கட்டு உடைந்ததால் வெள்ளம்: திருகோணமலை-மட்டக்களப்பு வீதி மூழ்கியது; 309 பேர் வான்வழியாக மீட்பு!

அதிக மழைவீழ்ச்சி காரணமாக நிரம்பி வழிந்த திருகோணமலை மாவிலாறு அணைக்கட்டின் ஒரு பகுதி நேற்று (நவம்பர்...

images 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாயாறு பிரதான பாலம் உடைந்தது: முல்லைத்தீவிலிருந்து மணலாறு, திருகோணமலை போக்குவரத்து முற்றாகத் தடை!

நாட்டில் தொடர்ந்து நிலவி வரும் வெள்ளப் பெருக்கு காரணமாக, முல்லைத்தீவில் உள்ள நாயாறு பிரதான பாலம்...

images 13
செய்திகள்இலங்கை

வெள்ளம் பாதித்த பகுதிகளில் ‘கொதித்தாறிய நீரை’ மட்டுமே அருந்தவும்: சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்கள் குடிநீரைப் பயன்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று...

img 692c75999ccf8
செய்திகள்இலங்கை

ஹெலிகொப்டர் விபத்தில் விங் கமாண்டர் நிர்மால் சியம்பலாபிட்டிய உயிரிழப்பு: விமானப்படை இரங்கல்!

சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது, வென்னப்புவ, லுணுவில...