கனடா எல்லை அருகே வனப்பகுதியில் பிள்ளை பெற்றெடுத்த பெண்: வெளிவரும் தகவல்
உலகம்செய்திகள்

கனடா எல்லை அருகே வனப்பகுதியில் பிள்ளை பெற்றெடுத்த பெண்: வெளிவரும் தகவல்

Share

கனடா எல்லை அருகே வனப்பகுதியில் பிள்ளை பெற்றெடுத்த பெண்: வெளிவரும் தகவல்

அமெரிக்க எல்லை அருகே, கியூபெக் வனப்பகுதியில் பெண் ஒருவர் இரவு பிள்ளை பெற்றெடுத்த சம்பவம் பொலிசாரால் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த நிறைமாத கர்ப்பிணி சட்டவிரோதமாக எல்லை கடந்து அமெரிக்கா செல்லவிருந்த நிலையிலேயே அவர் பிள்ளை பெற்றெடுத்திருக்கலாம் என அதிகாரிகள் தரப்பு நம்புகின்றனர்.

கியூபெக் பொலிஸ் அதிகாரிகள் தெரிவிக்கையில், அமெரிக்க எல்லை ரோந்துப்படை அதிகாரிகள் இந்த தகவலை தங்களுக்கு தெரியப்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளனர். உள்ளூர் நேரப்படி இரவு 10 மணியளவில் 911 இலக்கத்திற்கு தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், அதில் பெண் ஒருவர் மகப்பேறு நேரம் நெருங்கிய நிலையில் காணப்படுவதாக தெரியப்படுத்தியுள்ளனர்.

குறித்த தாயார் ஆண் ஒருவருடனும், இளம்வயது சிறார் ஒருவருடனும் காணப்பட்டதாக கியூபெக் பொலிசார் தெரிவித்துள்ளனர். விசாரணைக்கு பின்னரே, இந்த மூவரின் உறவுமுறை உறுதி செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

911 இலக்கத்திற்கு தொடர்புகொண்ட நிலையில், அவர் இருக்கும் இடத்தை உடனடியாக பொலிசார் உறுதி செய்துள்ளனர். சம்பவயிடத்திற்கு பொலிசார் மற்றும் அவசர மருத்துவ உதவிக்குழுவினர் செல்லும் போதே, அந்த பெண் பிள்ளை பெற்றெடுத்துள்ளார் எனவும், தாயும் சேயும் நலமாக இருப்பதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் ஆம்புலன்ஸ் மூலமாக கியூபெக் மகப்பேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்கள் எந்த நாட்டினர் என்பது உறுதி செய்யப்படும் எனவும், ஆனால் அவர்கள் கனடாவில் சட்டப்பூர்வமாகவே நுழைந்தவர்கள் என்பதுடன், எந்த குற்றச்செயல்களிலும் ஈடுபடவில்லை என உறுதி செய்துள்ளனர்.

கனடா மண்ணில் அந்த தாயாருக்கு பிள்ளை பிறந்துள்ளதால், அந்த குழந்தை தற்போது கனேடிய குடிமகன் அந்தஸ்தை பெறுகிறார் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...