சுவிஸ் ராணுவ சேவையை புறக்கணிக்க அழைப்பு விடுத்த இளைஞர்களை விடுவித்த உச்ச நீதிமன்றம்!
உலகம்செய்திகள்

சுவிஸ் ராணுவ சேவையை புறக்கணிக்க அழைப்பு விடுத்த இளைஞர்களை விடுவித்த உச்ச நீதிமன்றம்!

Share

சுவிஸ் ராணுவ சேவையை புறக்கணிக்க அழைப்பு விடுத்த இளைஞர்களை விடுவித்த உச்ச நீதிமன்றம்!

ராணுவ சேவையை புறக்கணிக்க அழைப்பு விடுத்த சமூக ஆர்வலர்களை உச்ச நீதிமன்றம் விடுவித்துள்ள ஆச்சரிய சம்பவம் ஒன்று சுவிட்சர்லாந்தில் நிகழ்ந்துள்ளது.

ராணுவ சேவையை புறக்கணிக்க அழைப்பு விடுத்ததற்காக அபராதம்
2020ஆம் ஆண்டு, இளைஞர்களான மூன்று சமூக ஆர்வலர்கள், ராணுவ சேவையை புறக்கணிக்குமாறும், கட்டாய ராணுவ சேவை செய்யாத இளைஞர்களுக்கு விதிக்கப்படும் கூடுதல் வரியையும் புறக்கணிக்குமாறும் அழைப்பு விடுத்தார்கள்.

அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு, அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

ஆனால், ஜூலை, அதாவது கடந்த மாதம் 27ஆம் திகதி, உச்ச நீதிமன்றம், அந்த இளைஞர்களை விடுவிப்பதாக தெரிவித்துள்ளதுடன், அவர்கள் செலவிட்ட தொகையை ஃபெடரல் அரசு திருப்பிக் கொடுக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

அவர்களுடைய செயல்கள் சட்டத்துக்கு விரோதமானவை என்றும், கோவிட் காலகட்டத்தில் ராணுவம் மக்களைக் காக்கும் முக்கிய பணியில் ஈடுபட்டிருந்த நேரத்தில், நாட்டின் பாதுகாப்பை அபாயத்துக்குள்ளாக்கும் விதத்தில் அவர்களுடைய நடவடிக்கைகள் அமைந்திருந்ததாகவும் அவர்கள் மீது முன்பு குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

ஆனால், உச்ச நீதிமன்ற தீர்ப்பாணைய நீதிபதியோ, முந்தைய தீர்ப்பு, மக்களுக்கு தங்கள் கருத்தை வெளிப்படுத்தும் உரிமையை அளிக்கும் அரசியல் சாசன உரிமைக்கு முரணானது என்று கூறி அவர்களை விடுவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FhQ32bJ38eZ8F2FPwbN0k
செய்திகள்உலகம்

கிரிமியா பாலம் தாக்குதல்: 8 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்து ஆயுள் தண்டனை விதிப்பு!

ரஷ்யா-உக்ரைன் போரின்போது கிரிமியா பாலத்தின் (Crimean Bridge) மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பான வழக்கில் கைது...

25 69274cb0355bf
செய்திகள்இலங்கை

மலையக ரயில் மார்க்க சேவை மாற்றம்: நாளை காலை வரை கோட்டை-ரம்புக்கனைக்கு இடையே மட்டுமே இயக்கம்!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, மலையக ரயில் மார்க்கத்தில் (Up-Country Line) உள்ள அனைத்து...

a0ec4e898a025565eef9a0e946ab5c0fY29udGVudHNlYXJjaGFwaSwxNzM0OTk0MzEw 2.78463606
செய்திகள்இலங்கை

அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டணம் ரத்து: சீரற்ற காலநிலை சீரடையும் வரை வாகனங்கள் இலவசமாகப் பயணிக்க அனுமதி!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கான கட்டணங்கள் அறவிடப்படாது என...

1500x900 1472110 start
செய்திகள்இலங்கை

மோசமான வானிலை காரணமாக மலேசியாவின் ஏர் ஏசியா விமானம் திருவனந்தபுரத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டது!

இலங்கையில் தற்போது நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, மலேசியாவிலிருந்து இன்று (நவம்பர் 28) இரவு...