5 1 scaled
உலகம்செய்திகள்

கடனைக் கட்ட வங்கி ஊழியர் தொந்தரவு! கணவர் தற்கொலை

Share

கடனைக் கட்ட வங்கி ஊழியர் தொந்தரவு! கணவர் தற்கொலை

வங்கியில் வாங்கிய கடனை திரும்ப கட்ட முடியாததால் விரக்தியில் மனைவிக்கு போன் செய்து விட்டு கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மாநிலம், தமிழகத்தில் உள்ள சென்னை காசிமேடு விநாயகபுரம் 1-வது பகுதியைச் சேர்ந்த ரகுமான்(38) என்பவரும், சாமுண்டீஸ்வரி என்பவரும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவர், எவர்சில்வர் பட்டறையில் பாலிஸ் போடும் வேலை செய்து வந்தார்.

இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் வங்கி ஒன்றில் ரூ.2 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அதனை மாத தவணையாக 6 ஆயிரம் ரூபாய் செலுத்தி வந்தார். இந்நிலையில், சரியாக வேலை இல்லாத காரணத்தினால் சில மாதங்களாக பணத்தை செலுத்த முடியவில்லை.

அதனால், வங்கி ஊழியர்கள் ரகுமானின் வீட்டிற்கு வந்து பணத்தை தருமாறு நெருக்கடி கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து, ரகுமான் தனது மனைவிக்கு போன் செய்து, வங்கி ஊழியர்கள் பணத்தை தருமாறு மிரட்டி வருகின்றனர். குழந்தைகளையும், குடும்பத்தையும் பார்த்து கொள். நான் தூக்கிட்டு தற்கொலை செய்ய போகிறேன் எனக் கூறி போனை கட் செய்துள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த மனைவி பக்கத்தில் வீட்டில் உள்ளவர்களுக்கு போன் செய்து பார்க்கும் படி கூறியுள்ளார். அவர்கள், அங்கு சென்று பார்த்த போது, ரகுமான் மின்விசிறியில் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

இதனிடையே, ரகுமான் உறவினர்கள், வங்கி கடனை திருப்பி செலுத்துமாறு மிரட்டல் கொடுத்த ஊழியர்களிடம் பணம் ரெடியாக இருக்கிறது, வாங்கிக் கொள் என கூறியுள்ளனர்.

அதை வாங்க ஊழியர்கள் வந்த போது, அவர்களை பிடித்து காசிமேடு பொலிசில் ஒப்படைத்தனர். இது பற்றி பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...