6 1 scaled
உலகம்செய்திகள்

பயண எச்சரிக்கை விடுத்துள்ள ஐரோப்பிய நாடு: திண்டாடும் மக்கள்

Share

பயண எச்சரிக்கை விடுத்துள்ள ஐரோப்பிய நாடு: திண்டாடும் மக்கள்

கோடை காலத்தில் விடுமுறையை கொண்டாட ஐரோப்பிய நாடுகளுக்கு படையெடுக்கும் பிரித்தானியர்களுக்கு இந்தமுறை கடும் ஏமாற்றமாக அமைந்துள்ளது.

இத்தாலி, கிரேக்கம் உட்பட பல நாடுகளில் பற்றியெரியும் காட்டுத்தீயால், அங்குள்ள அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கிரேக்கத்தில் ரோட்ஸ் மற்றும் கோர்ஃபு தீவுகளில் காட்டுத்தீ பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பிட்ட பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதுடன், அவசர தேவைகளுக்காக மட்டும் குறிப்பிட்ட நிறுவனங்கள் விமான சேவையை முன்னெடுத்தன.

இந்த நிலையில் மஜோர்காவின் சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது, அதே நேரத்தில் ஐபிசா மற்றும் மெனோர்காவும் அதிக ஆபத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலி, கிரேக்க நாடுகளின் வரிசையில் தற்போது போர்த்துகல் நாடும் காட்டுத்தீ ஆபத்தில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைநகர் லிஸ்பனுக்கு மேற்கே 30 கிமீ தொலைவில் அமைந்துள்ள விடுமுறை தலமான காஸ்காய்ஸ் அருகே தீ விபத்து ஏற்பட்டது.

தீயை அணைக்கவும், வீடுகளை பாதுகாக்கவும் குடியிருப்பாளர்களும் தீயணைப்பு வீரர்களும் போராடி வருகின்றனர். தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் விமானங்களும் பயன்படுத்தப்படுகிறது. சுமார் 600 தீயணைப்பு வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...