மலேசியாவில் காணாமல்போன நபர் முதலையின் வயிற்றுக்குள்
மலேசியாவில் விவசாயி ஒருவர் காணாமல்போன நிலையில், பொலிசார் அவரைத் தீவிரமாக தேடிவந்தனர்.
மலேசியாவின் Tawao பகுதியில் வாழ்ந்துவந்த Addi Bangsa (60) என்னும் நபர் காணாமல்போனதைத் தொடர்ந்து பொலிசார் அவரைத் தேடிவந்தனர்.
நான்கு நாட்களுக்குப் பிறகு, Addi முதலை ஒன்றின் வயிற்றுக்குள் சடலமாகக் கண்டெடுக்கப்பட, அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
எதற்காக முதலை ஒன்றைப் பிடித்து அதை வெட்டி பரிசோதிக்கவேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை.
என்றாலும், Addiயின் உடல் முதலையின் வயிற்றுக்குள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொலிசார் தேடுதல் வேட்டையை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளனர்.