ஹீரோக்களுக்கு உக்ரைன் நன்றியுள்ளதாக இருக்கும் - ஜெலென்ஸ்கி
உலகம்செய்திகள்

ஹீரோக்களுக்கு உக்ரைன் நன்றியுள்ளதாக இருக்கும் – ஜெலென்ஸ்கி

Share

ஹீரோக்களுக்கு உக்ரைன் நன்றியுள்ளதாக இருக்கும் – ஜெலென்ஸ்கி

உக்ரைனின் சுதந்திரம், உரிமைக்காக தங்கள் வீரர்கள் போராடுவதாக ஜனாதிபதி ஜெலென்ஸ்கி பதிவிட்டுள்ளார்.

லிதுவேனியாவில் நடந்த நேட்டோ உச்சிமாநாட்டில் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கலந்துகொண்டார்.

அங்கு, ‘உக்ரைன் நேட்டோவில் இருக்குமா என்பது பற்றிய சந்தேகங்கள் அல்லது தெளிவின்மையை நாங்கள் நீக்கிவிட்டோம். அது இருக்கும்’ என ஜெலென்ஸ்கி கூறிய அறிக்கைகளை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

அதேபோல் வியாழன் அன்று வெளியிட்ட கருத்துக்களில், நேட்டோ உச்சிமாநாடு உக்ரைனுக்கு முன்னெப்போதும் இல்லாத பாதுகாப்பு அடித்தளத்தை அளித்து, கூட்டணியில் அங்கத்துவம் பெறுவதற்கான பாதையில் வைத்தது என்றார் ஜெலென்ஸ்கி.

இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் உக்ரைன் இராணுவ வீரர்கள், ஏவுகணைகள் ஏவுதல் உள்ளிட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ள ஜெலென்ஸ்கி,

‘உக்ரைனின் சுதந்திரத்திற்காக, கண்ணியத்திற்காக, மக்கள் அனைவரது வாழ்வதற்கான உரிமைக்காக நாங்கள் போராடுகிறோம். எங்கள் வீரர்களுக்கு, எங்கள் ஹீரோக்களுக்கு, போராடும் அனைவருக்காகவும் உக்ரைன் நன்றியுள்ளதாக இருக்கும்’ என தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பாக ஜெலென்ஸ்கி தனது வீடியோவில், சுதந்திரம் பெற்றதில் இருந்து முதல் முறையாக உக்ரைன் நேட்டோவுக்கான பாதையில் பாதுகாப்புக்கான அடித்தளத்தை நாங்கள் நிறுவியுள்ளோம் என கூறியிருந்தார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
European Union ggg
உலகம்உலகம்

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்த டொனால்ட் ட்ரம்ப்

ஐரோப்பிய ஒன்றியம், கூகுள் நிறுவனம் தனது தேடல் முடிவுகளில் சொந்த சேவைகளுக்கு முன்னுரிமை அளித்ததாகவும், ஐரோப்பிய...

arrested woman with handcuffs
உலகம்

நேட்டோவை உளவு பார்த்த சீன பெண்!

பெல்ஜியத்தின் மான்ஸ் பகுதியில் அமைந்துள்ள ‘ஷேப்’ எனப்படும் நேட்டோ இராணுவத் தலைமையகத் தளத்தில் பயிற்சிப் பணியாளராக...

உமா குமரன்
உலகம்

பிரித்தானிய அரசாங்கத்தில் முக்கிய பொறுப்பில் ஈழத்தமிழ்ப் பெண்

இலங்கைத் தமிழரான உமா குமரன், பிரித்தானியாவின் வெளிநாட்டு அமைச்சகத்தில் இணை அமைச்சராக பதவி வகித்து வந்த...

us troops
உலகம்உலகம்

ஈரானின் தாக்குதல்களில் அமெரிக்க ராணுவ வீரர்கள் பலி.

ஜோர்டானில் ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் இரண்டு அமெரிக்க இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன்...