இந்தியாஇலங்கைஉலகம்செய்திகள்

ஒரு மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்ய திட்டம் !

sNCh2mAFdmbPVXQ9mseR
Share

ஒரு மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்ய திட்டம் !

இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதியை மேலும் விரிவுபடுத்தும் வகையில், நாட்டு கோழிப்பண்ணைகளை ஆய்வு செய்வதற்காக பிரதிநிதிகள் குழுவொன்று இந்தியா சென்றுள்ளது.

சுகாதாரம் மற்றும் கால்நடை உற்பத்தித் திணைக்களத்தின் இரண்டு அதிகாரிகளும், அரச வர்த்தக இதர சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்தின் அதிகாரி ஒருவரும் இந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் என அரச வர்த்தக இதர சட்டக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்தார்.

இந்தியாவில் சென்னையில் அமைந்துள்ள பல கோழிப்பண்ணைகளை ஆய்வு செய்த பின்னர் நாளை அவர்கள் நாடு திரும்பவுள்ளனர். தற்போது இந்தியாவில் உள்ள மூன்று கோழிப்பண்ணைகளில் இருந்து முட்டைகள் இறக்குமதி செய்யப்படுகின்றன.

இந்நிலையில் குறித்த பண்ணைகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் நாட்டின் தேவைக்கு போதுமானதாக இல்லை என்பதன் காரணமாக புதிய பண்ணைகளை இனங்கண்டு மேலதிக முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

எதிர்காலத்தில் இலங்கைக்கு நாளாந்தம் சுமார் ஒரு மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
19 9
உலகம்செய்திகள்

பயங்கரவாதிகளின் ஏவுகணை தளத்தை தாக்கி அழித்த இந்தியா

பாகிஸ்தானின் (Pakistan) சியால்கோட்டில் இயங்கி வந்த பயங்கரவாதிகளின் ஏவுகணை ஏவுதளம் இந்திய இராணுவத்தினரால் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதாக...

17 9
இலங்கைசெய்திகள்

கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டல்களில் இரவில் மந்திராலோசனை நடத்தும் அரசியல்வாதிகள்

சமகாலத்தில் கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டல்களில் அரசியல் முக்கியஸ்தர்கள் இரகசிய சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர். கொழும்பு மாநகர...

20 10
உலகம்செய்திகள்

ரோகித் சர்மாவை தொடர்ந்து விராட் கோலி எடுத்த முடிவு

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி(Virat Kholi) டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக...

18 9
உலகம்செய்திகள்

ஐபிலை தொடர்ந்து மற்றுமொரு கிரிக்கெட் தொடரும் ஒத்திவைப்பு..!

போர் பதற்றம் காரணமாக இந்தியன் பிரீமியர் லீக்2025 தொடரைத் தொடர்ந்து, பாகிஸ்தான் சூப்பர் லீக் 2025...