இந்தியாஉலகம்செய்திகள்

தாயால் 8 முறை கர்ப்பமடைந்த 16 வயது சிறுமி!

BJwCKuRQOalykW7u9IqG 1
Share

தாயால் 8 முறை கர்ப்பமடைந்த 16 வயது சிறுமி!

தாயின் உதவியுடன் 16 வயது சிறுமி 8 தடவைகள் கர்ப்பமடைந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஈரோடு மாவட்டம் கைகாட்டி வலது பகுதியைச் சேர்ந்த சரவணன் மற்றும் இந்திராணி தம்பதியினர் தமது மகளுடன் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் சிறுமிக்கு 4 வயது இருக்கும் போதே சரவணன் விபத்தில் சிக்கி உயிரிழக்க இந்திராணி, இரண்டாவதாக சையத் அலி என்பவரை திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில் தாயான இந்திராணியோ அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் தனது கருமுட்டையை விற்பனை செய்து வந்துள்ளார். இதனால் அவருக்கு ஒரு கருமுட்டைக்கு 20 ஆயிரம் ரூபாய் வரையிலும் வழங்கப்பட்டு வந்துள்ளது.

காலங்கள் ஓட சிறுமி 12 வயதை அடைந்த வேளை வளர்ப்பு தந்தையால் பாலியல் துன்புறுத்தலிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். பின்னர் தமது மகள் என்று கூட கருதாது இந்திராணியும் சையத்தும் இணைந்து சிறுமியின் கருமுட்டையை விற்று காசாக்கியுள்ளனர்.

இதை தொடர்ந்து ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுமியின் கருமுட்டைகள் 8 முறை விற்பனை செய்துள்ளனர். தமது 16 வயது மகளிற்கு 22 வயது எனவும் பானு மகாலிங்கம் என்ற பெயரில் திருமணமாகிவிட்டதாகவும் பொய் சான்றுகளை சமர்ப்பித்து கருமுட்டைகளை விற்றுள்ளனர்.

இதற்கு உதவியாக அதே பகுதியைச் சேர்ந்த மாலதி என்பவர் இடைத் தரகராக செயற்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் சிறுமி அண்மையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இது தொடர்பாக புகார் மனு அளித்துள்ளார்.

அதையடுத்து தாயார் இந்திராணி அவரது இரண்டாவது கணவர் சையத் அலி மற்றும் இடைத்தரகர் மாலதி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்த பொலிஸார் அவர்களை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, பாதிக்கப்பட்ட அந்த சிறுமி ஈரோட்டில் உள்ள மாவட்ட குழந்தைகள் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளாதாக தெரியவந்துள்ளது.

#world
Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...