xP1yaX0qaUwAmm8RCmzq 1
இலங்கைஉலகம்செய்திகள்

இலங்கை யானைகள் பாகிஸ்தானுக்கு?

Share

இலங்கை யானைகள் பாகிஸ்தானுக்கு?

பாகிஸ்தான் கராச்சி மிருகக்காட்சிசாலையில் ஆபிரிக்க யானை நூர் ஜெஹான் உயிரிழந்ததையடுத்து, பாகிஸ்தானுக்கு இரண்டு பெண் யானைகளை பரிசாக வழங்குவதாக இலங்கை தெரிவித்துள்ளது என லாஹூரிலுள்ள இலங்கை தூதரக அதிகாரி யாசின் ஜோயா, அந்நாட்டின் ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

யானைகளுக்கான கோரிக்கை இலங்கைக்கு, அனுப்பப்பட்டுள்ளது. இதனிடையே, யானைகளை வெளிநாடுகளுக்கு அனுப்ப இலங்கை நீதிமன்றம் ஏற்கனவே தடை விதித்துள்ள நிலையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை இரண்டு பெண் யானைகளை பாகிஸ்தானுக்கு அனுப்பும் என்று குறித்த ஊடகத்துக்கு கூறிய அவர், அவற்றில் ஒன்று கராச்சி மிருகக்காட்சிசாலைக்கும் மற்றொன்று லாகூருக்கும் வழங்கப்படவுள்ளது.

கடந்த 2017 மே மாதத்தில் உயிரிழந்த சுஷீயின்மரணத்திற்குப் பிறகு லாகூர் மிருகக்காட்சிசாலையில் யானைகள் இருக்கவில்லை என்று இலங்கை தூதரக அதிகாரி யாசின் ஜோயா தெரிவித்துள்ளார்.

மேலும், பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் யானைகள் குறித்த அறிவிப்பு இலங்கை அரசாங்கத்தினால் எதிர்வரும் சில நாட்களில் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
49b63185 90f2 4718 86a9 514694fd4c00
செய்திகள்இலங்கை

வாக்குறுதி அளித்தபடி நிறைவேற்று ஜனாதிபதி முறை நிச்சயமாக ஒழிக்கப்படும் – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தில் உறுதியளித்தவாறு, நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை கட்டாயம் ஒழிக்கப்படும்...

harini 07 02 2025 1 1000x600 1
செய்திகள்உலகம்

மிஸ் பின்லாந்து பட்டம் பறிப்பு – ஆசிய நாடுகளிடம் மன்னிப்பு கோரினார் பின்லாந்து பிரதமர்!

ஆசியர்களைக் கேலி செய்யும் வகையில் இனவெறிப் போக்கைக் வெளிப்படுத்திய புகாரில், 2025-ஆம் ஆண்டுக்கான மிஸ் பின்லாந்து...

1598682810 0047
செய்திகள்உலகம்

ஆர்ட்டிக் திமிங்கிலங்களில் அபாயகரமான வைரஸ் பாதிப்பு: ஆளில்லா விமானங்கள் மூலம் புதிய கண்டுபிடிப்பு!

ஆர்ட்டிக் கடலில் வாழும் திமிங்கிலங்களின் ஆரோக்கியத்தைக் கண்டறிய ஆளில்லா விமானங்கள் (Drones) மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்,...

Progress review meeting of the Ministry of Transport 1
இலங்கைஅரசியல்செய்திகள்

நாடு மீண்டும் திவால் நிலைக்குத் தள்ளப்படாது – புள்ளிவிபரங்களுடன் ஜனாதிபதி அநுர குமார அதிரடி விளக்கம்!

பேரிடர் நிவாரணத்திற்காக ஒதுக்கப்பட்ட 500 பில்லியன் ரூபா நிதியினால் நாடு மீண்டும் திவால்நிலைக்குச் செல்லும் என்ற...