married
உலகம்செய்திகள்

92 வயதில் 5-வது திருமணம் செய்கிறார் சர்வதேச ஊடகத்துறை ஜாம்பவான்

Share

சர்வதேச ஊடகத்துறையின் ஜாம்பவானாக ருபெர்ட் முர்டாச் அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட பல நாடுகளில் சுமார் 120-க்கும் அதிகமான பத்திரிகைகளை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்களின் உரிமையாளரான இவர் கடந்த 1956-ம் ஆண்டு விமானப் பணிப்பெண் ஒருவரை மணந்தார். ஆனால், 1967-ம் ஆண்டு இருவரும் விவாகரத்து மூலம் பிரிந்தனர். பின்னர் பத்திரிகையாளர் ஒருவரை திருமணம் செய்துகொண்ட முர்டாச், 1999-ம் ஆண்டு அவரையும் பிரிந்து 3-வதாக சீனாவைச் சேர்ந்த பெண் தொழில் அதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

அவருடன் 14 ஆண்டுகள் வாழ்ந்து, கடந்த 2013-ம் ஆண்டு அவரையும் பிரிந்தார். அதனைத் தொடர்ந்து 4-வதாக மாடல் மற்றும் நடிகையான ஜெர்ரி ஹாலை 2016-ல் திருமணம் செய்துகொண்ட முர்டாச், கடந்த ஆண்டு அவரையும் விவகாரத்து செய்தார்.

இந்த நிலையில் 92 வயதில் 5-வது முறையாக திருமணம் செய்து கொள்ள உள்ளதாக முர்டாச் அறிவித்துள்ளார். கணவரை இழந்த மூத்த பெண் பத்திரிகையாளரும், மாடல் அழகியுமான 66 வயதான ஆன் லெஸ்லி ஸ்மித்துடன் காதல் வயப்பட்டதாகவும், வருகிற கோடை காலத்தில் அவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் முர்டாச் கூறினார்.

இது குறித்து அவர் தனது சொந்த பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், “மீண்டும் காதலில் விழ நான் பயந்தேன். ஆனால் இது எனது கடைசி காதலாக இருக்கும் என்று எனக்கு தெரியும். அது சிறப்பாக இருக்கும். நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்றார்.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...