1843833 china
உலகம்செய்திகள்

தைவானை நோக்கி படையெடுக்கும் போர் விமானங்கள், கப்பல்கள்

Share

உள்நாட்டு போருக்கு பின் கடந்த 1949-ம் ஆண்டு சீனாவிடம் இருந்து தைவான் தனி நாடாக பிரிந்தது.

இருந்தபோதிலும் தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என சீனா கூறி வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது.

இந்த சூழ்நிலையில் தைவானுடன் அமெரிக்கா நெருக்கம் காட்டி வருவது சீனாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அவ்வப்போது சீனா, தைவான் எல்லைக்குள் போர் விமானங்கள் மற்றும் போர் கப்பல்களை அனுப்பி அச்சுறுத்தி வருகிறது.

மேலும் தைவான் மீது படையெடுக்க போவதாக சீனா மிரட்டல் விடுத்து வருவதால் கடந்த சில மாதங்களாக இரு நாட்டு எல்லையில் பதற்றமான நிலை உருவாகி இருக்கிறது.

இந்த பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் இன்று தைவானை நோக்கி 25 போர் விமானங்கள் மற்றும் 3 போர் கப்பல்களை சீனா அனுப்பி உள்ளதாக தைவான் கூறி உள்ளது.

இது தொடர்பாக தைவான் ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கடந்த 24 மணி நேரத்திற்குள் சீனா ராணுவத்துக்கு சொந்தமான 25 போர் விமானங்கள் தைவான் வான்வெளி பகுதியில் அத்துமீறி நுழைந்து உள்ளது. 3 போர் கப்பல்களும் தைவானின் கடல்பரப்பில் ஊடுருவி இருக்கிறது. என கூறப்பட்டு உள்ளது.

சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தைவானும் எல்லைப்பகுதியில் போர் விமானங்களையும் போர் கப்பல்களையும் அனுப்பி உஷார்படுத்தி உள்ளது. இதன் காரணமாக சீனா-தைவான் எல்லைப் பகுதியில் எந்த நேரமும் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...